தருமபுரி, மார்ச் 12- தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்தை தடுக்க, 6.6 கிலோமீட்டர் மேம் பாலம் அமைக்கும் பணிக்கான அடிக் கல் நாட்டு விழா, செவ்வாயன்று நடை பெற்றது. தருமபுரி மாவட்டம், தொப்பூர் கண வாய் பகுதியில் உள்ள மலை பாதை யில் ஏற்படும் விபத்தை தடுக்க 6 .6 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் அமைத்து விபத்தை தவிர்க்க வேண்டும் என தருமபுரி நாடாளுமன்ற உறுப்பி னர் செந்தில் குமார் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக கோரிக்கை மனு அளித்தார். இதன் தொடர்ச்சியாக, ஒன்றிய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி அளித்து ஒப்பந்த புள்ளி கோரியிருந்தது. இந்நி லையில், ஒப்பந்தபுள்ளி முடிவு செய்யப் பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாயன்று நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் சாலை அமைக்கும் பணி யினை தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, தருமபுரி சுங்கச்சாவடி அருகே, தருமபுரி நாடாளுமன்ற உறுப் பினர் செந்தில்குமார் வாகன ஓட்டிக ளுக்கு இனிப்பு வழங்கி, மேம்பாலம் அமைக்கப்பட உள்ள பகுதிகளை அதிகாரிகளுடன் நேரடியாக ஆய்வு நடத்தினார்.