districts

img

10 வாகனங்கள் மூலம் நிவாரணப்பொருட்கள் சென்னைக்கு அனுப்ப ஏற்பாடு

திருப்பூர், டிச.9- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகம், எதிரில் உள்ள தனியார் திருமன  மண்டபத்தில் மாவட்ட நிர்வாகத் தின் சார்பில் அனுப்பி வைக்கப்படும்  மிக்ஜம் புயல் நிவாரணப்பொருட் களை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜ் தலைமையில் சனியன்று பார்வையிட்டனர். தமிழ்நாட்டில் மிக்ஜம் புயல்  காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில்  இதுவரை மிக்ஜாம்  புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக் களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங் கிடும் வகையில்   14 வாகனங்களின் மூலம் ½ லிட்டர், 1 லிட்டர், 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர்  கேன்கள் என மொத்தம் 56,956 லிட்டர்  தண்ணீர் கேன்களும், 36,426 பிஸ்கட்  பாக்கெட்களும்,  1,900 பிரட் பாக்கெட் களும்,  பால் பவுடர், அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களும் மற்றும் 400 பெட் சீட், 400 துண்டு, 400 டிசர்ட் உள்ளிட்ட  பொருட்கள் சென்னைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. அதைத்தொ டர்ந்து, சனியன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார்  திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வா கத்தின் சார்பில் 10 வாகனங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படும் மிக்ஜம் புயல்  நிவாரணப்பொருட்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச் சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் பார் வையிட்டனர். இந்நிகழ்வின் போது, மாவட்ட வரு வாய் அலுவலர் த.ப.ஜெய்பீம், மாவட்ட  ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக் குநர் அ.லட்சுமணன், கூட்டுறவு சங்கங் களின் இணைப்பதிவாளர் சொ.சீனி வாசன், உதவி இயக்குநர் (ஊராட் சிகள்) மதுமிதா மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.