districts

img

தீக்கதிர் செய்தி எதிரொலி அரசு மருத்துவமனையில் குடிநீர் வசதி ஏற்பாடு

பொள்ளாச்சி, மே 11-  பொள்ளாச்சி அரசு மருத் துவமனையில் சுத்தகரிக்கப் பட்ட குடிநீர் மையம் அமைக் கக்கோரி, தீக்கதிர் நாளித ழில் செய்தி வெளியான தைத் தொடர்ந்து சுத்தக ரிப்பு குடிநீர் கொள்கல கள் அமைக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை யில் சுகாதாரமான குடிநீர் வசதி இல்லாததால் நோயாளிகள்  உட்பட மருத்துவமனைக்கு வரும் அனைத்து தரப்பின ரும் அருகிலுள்ள உணவகத்திற்கும், பேக்கரிகளுக்கும் சென்று குடிநீர் வாங்கி வந்தனர். இதுதொடர்பாக, தீக்க திர் நாளிதழில் கடந்தமே 5 ஆம் தேதியன்று செய்தி வெளியா னது. இதைத்தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம்  மற்றும் பொள்ளாச்சி நகராட்சி நிர்வாகம், சார்பில் மூன்று  சுத்தகரிக் கப்பட்ட குடிநீர் கொள்கலன்கள் அமைக்கப்பட்டு, செவ் வாயன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட் டது. முதற்கட்டமாக பிரசவ பிரிவு கட்டிடம் மேல்புறம் மற்றும் கீழ்தளத்திலும்  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கொள்கலன்கள்  நிறுவப்பட்டுள்ளது. மேலும், இன்னும் ஒரிரு வார காலத்திற் குள் குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட அனைத்து வார்டுகளி லும் குடிநீர் கொள்கலன்கள் அமைக்கப்படும் என மருத்துவ மனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.