districts

img

325 மாணவர்களுக்கு ரூ10.39 கோடி கடன் வழங்க ஒப்புதல்

திருப்பூர், நவ. 12 –  திருப்பூர் மாவட்டத்தில் நடை பெற்ற கல்வி கடன் முகாமில் 325 மாணவர்களுக்கு ரூ10.39 கோடி கடன் வழங்க ஒப்புதல் கடிதம் வழங் கப்பட்டுள்ளது.  இதுகுறித்து, திருப்பூர் மாவட்ட  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தலை மையில் 10 ஆம்தேதியன்று மாவட்ட  ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் கல்வி கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி  மாணவர்கள் பயன்பெறும் வகை யில் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் முன்னோடி வங்கி மூலம் 9 ஆம்தேதி மற்றும் 10  ஆம்தேதி ஏற்பாடு செய்யப்பட்டது. இம்முகாமில் திருப்பூர் மற்றும்  ஈரோடு நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

இதில்  திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து  கல்விக் கடன் பெற முகாமில் பெற் றோர்களுடன் மாணவர்கள் பங்கேற் றனர்.  மேலும் இந்த முகாமில் கனரா  வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, யூனியன்  வங்கி,  இந்தியன் வங்கி உள்ளிட்ட  18 வங்கிகள் கலந்து கொண்டனர். திருப்பூர் மாவட்டத்தில் மொத்த மாக 440 மாணவர்கள் கலந்து கொண்டதில் 325 மாணவர்களுக்கு 10.39 கோடி அளவில் கடன் ஒப்புதல்  கடிதம் வழங்கப்பட்டது.  மேலும், அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்களான தாட்கோ, மாவட்ட தொழில் மையத்தின் கடன் திட்டங்கள், பாரத பிரதமரின் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவ னங்களுக்கான திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் மக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத் தவும் வங்கிகள் அதனை பயன் படுத்திக்கொள்ள அறிவுறுத்தப் பட்டது. மேலும், முகாமில் வங்கிகள்  மீதான குறைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் எடுத்து ரைக்கப்பட்டது. முகாமில் பெறப் பட்ட அனைத்தும் விண்ணப்பங் களும் பரீசிலக்கப்பட்டு விரைந்து கல்விக் கடன் வழங்கப்படும்.  மாநகராட்சி ஆணையாளர் கிராந்திகுமார்பாடி,  மாவட்ட முன் னோடி வங்கி மேலாளர் அலெக்ஸ் சாண்டர் மற்றும் துறை சார்ந்த அரசு  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.