districts

img

தபால் வாக்குகளுக்கான ஒப்புதலை தேர்தல் அலுவலர் நேரில் பெற்றார்

ஈரோடு, மார்ச் 21- ஈரோடு மாநகராட்சியில் நாடாளு மன்ற பொதுத் தேர்தலில் தபால்  வாக்கு செலுத்த பூர்த்தி செய்யப் பட்ட 12டி படிவத்தினை 85 வயதிற்கு மேற்பட்ட மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடமிருந்து பெறப்பட் டது. நாடாளுமன்ற தேர்தலில் வாக் குச்சாவடிக்கு சென்று வாக்கு  அளிக்க முடியாத 85 வயதிற்கு மேற் பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கொரோனா வைரஸ் தொற் றால் பாதிக்கப்பட்ட தங்களது ஓட் டுக்களை தபால் மூலம் செலுத்த லாம். இதற்காக சம்மந்தப்பட்ட வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் 24 ஆம் தேதிக்கு முன் இதற்கான படி வம் 12டி வழங்கி ஒப்புதல் பெற உள் ளனர். சம்மந்தப்பட்ட வாக்காளர்கள் வீட்டில் இல்லையெனில், 2ஆவது முறை நேரில் சென்று வழங்கி ஒப்பு தல் பெறுவர். அதன்படி, ஈரோடு மாவட்ட தேர் தல் அலுவலரும், மாவட்ட ஆட்சி ருமான ராஜகோபால் சுன்கரா வாக்க ளிக்க தகுதியான, வாக்குச்சாவ டிக்கு வர இயலாதோர் இல்லத்திற்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையினை சரிபார்த்து, அவ்வி பரத்தை உரிய படிவத்தில் பூர்த்தி  செய்து, வாக்காளரின் கையொப் பம் பெற்றார். மேலும் வாக்களிக்கும்  முறை குறித்து விளக்கி, பூர்த்தி  செய்து அஞ்சல் வாக்கு செலுத்துவ தற்கான 12டி விண்ணப்ப படிவத் தினை பெற்றுக் கொண்டார்.  சேலம் இதேபோன்று, நாடாளுமன்ற தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டில் இருந்த படியே வாக்குகளை செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற் கான பணிகளை சேலம் மாவட்ட  தேர்தல் அலுவலரும், ஆட்சியரு மான பிருந்தாதேவி தொடங்கினார்.