நாமக்கல், அக்.28- அரசுப்பள்ளி மாணவர் கள் ரஷ்யா சென்று வந்த நிலையில் அவர்களுக்கு பாராட்டு விழா நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற் றது. இதில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் பங்கேற்று உரையாற்றினார். தமிழகத்தில் 11 மாவட் டங்களை சேர்ந்த 50 அரசு பள்ளி மாணவ, மாணவிகள் ரஷ்யாவுக்கு கல்விப் பய ணம் மேற்கொண்டு, நாடு திரும்பினர். அவர்களுக்கு திருச்செங்கோடு தனியார் கல்வி நிறுவன வளாகத் தில் பாராட்டு விழா நடை பெற்றது. இன்றைய தலை முறை யினரிடம் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற் படுத்துவதற்காக பிரமோஸ் மைய நிறுவனரும், மூத்த விஞ்ஞானியுமான சிவதானப் பிள்ளை முயற்சியில், தமிழ கத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஜனவரி 26 ஆம் தேதி முதல் 15 அமர்வுகளாக ராக்கெட் தொழில்நுட்பம் பற்றி இணைய வழியில் அகத்தி யர் அறக்கட்டளை மற்றும் யூஸ் சாகோ சொல்யூஷன்ஸ் உடன் இணைந்து பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் 29 மாவட்டங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர் களில் சிறந்த 50 மாணவ, மாணவிகள் தேர்வு செய் யப்பட்டு, ரஷ்யாவில் உள்ள கலாச்சாரம் மற்றும் அறிவியல் தொழில் நுட்பத்தை அறியும் விதமாக, செப்டம்பர் 30ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரை ரஷ்ய நாட்டில் உள்ள மிகப்பெரிய எருமிட் டேஜ் அருங்காட்சியகம், விக்டரி ஸ்கொயர், மெசேஜ் ஆப் லெனின் காரட் ஸ்கொ யர் கிரிமிலின் மியூசியம் ஆகியவற்றைக் பார்வை யிட்டனர். மேலும், பயிற்சி மாண வர்கள் அங்குள்ள விண் வெளி வீரர்களின் வாழ்க்கை முறை, உணவுப் பழக்க வழக்கம், பயிற்சி மற்றும் இதர ஆய்வுகள் குறித்து விஞ்ஞானிகள் மூலம் தெரிந்து கொண்டனர். அவ்வாறு ரஷ்யா சென்று திரும்பிய 50 மாணவ, மாண விகளுக்கும் ராக்கெட் ராஜாக்கள், ராணிகள் என சிறப்பு பெயருடன் அழைக் கப்பட்டு பாராட்டு விழா நடத் தப்பட்டது. நிகழ்ச்சிக்கு கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர்.சீனிவாசன் தலைமை வகித்தார். தலைமை விருந்தினராக தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் கலந்து கொண்டார். இதில், அமைச்சர் மா.மதி வேந்தன் பேசுகையில், இந்தியா - சோவியத் நட் புறவு மிக நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. ரஷ்யா வின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கம்யூனிசத்தை பின்பற்றி ஆட்சி நடத்தினார். அதேபோன்று, தமிழ்நாடு முதலமைச்சராக உள்ள ஸ்டாலின் திராவிட மாடல் சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்தி வருகிறார். அனை வரும் பொருளாதாரத் திலும், கல்வியும், சமூகத் தில் சமநிலை பெற வேண் டும் என்பதே நோக்கம். இந்த இளம் வயதில் அறிவியல் துறையில் ஆர்வம் கொண்டு பல்வேறு பயிற்சிகளைப் பெற்று வெளிநாடுகளில் சென்று தொழில்நுட்ப நிலையங்களை பார்வை யிட்டு வந்திருக்கிற இவர் களை பாராட்டுகிறேன் என் றார்.