districts

  ராசிபுரம் பகுதியில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது

பள்ளிபாளையம், மே 22-

    ராசிபுரம் பகுதியில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் பணி நிறைவு பெற்ற அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில்  ராசிபுரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

   இந்நிகழ்ச்சிக்கு மன்றத்தின் ஒன்றிய தலைவர் சி.குணவதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர் வே.லட்சுமி வரவேற் றார். மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கு.பாரதி, சிறப்பு விருந் தினர்களை கெளரவித்து நினைவு பரிசளித்தார். ராசிபுரம் வி. நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியை அ.அமுதா, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சு.பிரேமலதா உள்ளிட்டோர் விழாவில் கெளரவிக்கப்பட்டனர். இதில் நாமக்கல் மாவட்ட கல்வி அலு வலக (இடைநிலை) பள்ளிகளின் துணை ஆய்வாளர் கை. பெரியசாமி, ராசிபுரம் வட்டார கல்வி அலுவலர் ச.அருள் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.