ஈரோடு, அக். 23- தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மாணவ, மாணவி களுக்கு பாராட்டு விழா ஈரோடு, புன்செய் புளியம் பட்டியில் நடைபெற்றது. திருப்பூரில் கடந்த வாரம் நடைபெற்ற நோபல் உலக சாதனை நிகழ்ச்சி யில் புஞ்சைபுளியம்பட்டியை சேர்ந்த 25 வீரர், வீராங் கனைகள் கலந்துகொண்டு தொடர்ந்து 5 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை நிகழ்த்தியுள்ளனர். அவர்களுக்கான பாராட்டு விழா புஞ்சை புளியம்பட்டி சிந் தாமணி வித்யாலயா பள்ளியில் நடை பெற்றது. இந்த பாராட்டு விழாவில் சிந்தாமணி வித் யாலயா பள்ளி தாளாளர் லோகநாதன், விடி யல் சமூகநல அறக்கட்டளை செயலாளர் ஜெயகாந்தன், விழுதுகள் நற்பண்பு கல்வி மையம் நிறுவனர் கமலகண்ணன், சிலம்ப பயிற்சியாளர் பாலா மற்றும் பெற்றோர் கள், பொதுமக்கள் பங்கேற்று சாதனை மாண வர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.