உதகை, பிப்.3- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நக ராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்கா ணிக்க நுண் பார்வையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக வரும் பிப்.19 ஆம் தேதி தேர் தல் நடைபெற உள்ளது. நீலகிரியில் உள்ள 4 நகராட்சிகளில் உள்ள 108 வார்டு உறுப்பி னர் பதவிகளுக்கும், 11 பேரூராட்சிகளில் உள்ள 186 வார்டு உறுப்பினர் பதவி களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. 4 நகராட்சிகளில் 208, பேரூராட்சிகளில் 201 என மொத்தம் 409 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப் பட்டுள்ளன. இதுதவிர பதற்றமான வாக்குச் சாவடிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப் பட்டுள்ளது. இதன்படி நீலகிரி மாவட்டத்தில் நக ராட்சி பகுதிகளில் 42 வாக்குச்சாவடிகளும், பேரூராட்சி பகுதிகளில் 13 வாக்குச்சாவடி களும் பதற்றமானவையாக கண்டறியப் பட்டுள்ளது. இங்கு வாக்குபதிவின்போது கூடுதல் பாதுகாப்புகள் ஏற்படுத்தப்பட உள் ளது. உதகை நகராட்சியில் சுல்தான் பேட்டை, பாம்பே கேசில், காந்தல் பகுதி களில் 13 வாக்குச்சாவடிகளும், குன்னூர் நகராட்சியில் வண்டிசோலை, கிராஸ் பஜார், ஓட்டுபட்டறை பகுதிகளில் 5 வாக்குச் சாவடிகளும், கூடலூர் நகராட்சியில் ஒன்றா வது மைல், தொரப்பள்ளி, சுங்கம், பழைய நீதிமன்ற சாலை, சனிவயல், செம்பாலா, மேல் கூடலூர் பகுதிகளில் 16 வாக்குச்சாவடி களும், நெல்லியாளம் நகராட்சியில் உப் பட்டி, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் 8 வாக்குச்சாவடிகளும் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது.
பேரூராட்சிகளை பொறுத்த வரை உலிக்கல் பேரூராட்சியில் 6 வாக்குச்சாவடிகளும், ஒவேலி பேரூராட்சி யில் 7 வாக்குச்சாவடிகளும் பதற்றமா னவை ஆகும். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர் கள் அச்சமின்றி வாக்களிக்க வசதியாக துப் பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப் பட உள்ளது. மேலும், வாக்குச்சாவடி நடவ டிக்கைகளை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. வெப் ஸ்டீரிமிங் செய்யவும் திட்டமிடப்பட்டு உள் ளது. பதற்றமான வாக்குசாவடிகளில் கண் காணிப்பு பணிகள் மேற்கொள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றிய நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதன்படி ஒவ்வொரு பதற்றமான வாக்குசாவடிக்கும் தலா ஒருவர் வீதம் 55 நுண்பார்வையாளர்களும், கூடுதலாக 6 நுண் பார்வையாளர்கள் உட்பட 61 பேர் நிய மிக்கப்பட்டுள்ளனர். ரூ.10 லட்சம் பறிமுதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் தேர்தல் நடை பெற்ற உள்ள நிலையில், இதுவரை உரிய ஆவனமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.9 லட்சத்து 87 ஆயிரத்து 150 ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். 15 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் துணை ஆட்சியர் நிலையில் தலா ஒருவர் வீதம் 15 பேர் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட் டுள்ளனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியரின் வளர்ச்சிப் பிரிவில் ஆரம்பிக்கப்பட்டு, 6 அலுவலர்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்துக்கு தேர்தல் பார்வையாளராக தமிழக தலைமை மருத்துவப் பணியாள ரும், தேர்வாணையத் தலைவருமான ஏ. ஆர்.கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ் நியமிக்கப் பட்டுள்ளார்.