தற்காலிகப் பட்டாசுக்கடை அமைப்பதற்கான விண்ணப்பகாலம் செப்.30 வரை நீட்டிப்பு
திருப்பூர், செப்.17- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் தற் காலிகப் பட்டாசுக்கடை அமைப்பதற்கான விண்ணப்பகாலம் வரும் செப்.30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் மாநகர காவல் ஆணையர் அலுவல கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் தற்கா லிகப் பட்டாசுக்கடை உரிமம் பெறுவதற்கு செப்.12 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பட்டாசு உரிமம் பெறுவதற்கான கால அவ காசம் செப்.30 வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் படிவம் ஏ5 ல் ரூ.2 மதிப்புள்ள நீதிமன்ற வில்லையுடன் கூடிய விண்ணப்படிவம், உரிமக் கட்டணம் ரூ.1200ஐ இணையத்தில் செலுத்திய ரசீது இணைக்கப்பட வேண்டும். பட்டாசு இருப்பு வைத்து விற்பனை செய்யப்பட வுள்ள இடத்தின் வரைபடத்தின் 6 நகல்கள், வரைபடத்தில் சம் பந்தப்பட்ட இடத்தின் முழு முகவரி தெளிவாகக் குறிப்பிட் டிருக்க வேண்டும். மனுதாரரின் கையொப்பம் இடப்பட்டி ருக்க வேண்டும். பட்டாசு விற்பனை செய்யும் இடம் சொந்தக் கட்டடமாக இருப்பின் 2024-25-ஆம் ஆண்டுக்கான சொத்து வரி ரசீது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். வாடகைக் கட்டட மாக இருப்பின் கட்டட உரிமையாளருடன் ரூ.20 மதிப்பு குறை யாத முத்திரைத்தாளில் ஏற்படுத்திக் கொண்ட வாடகை ஒப்பந்த ஆவணம் இணைக்க வேண்டும். மாநகராட்சி அல்லது பொதுப்பணித் துறை கட்டடமாக இருப்பின், அந்த துறை சார்ந்த அலுவலரின் மறுப்பின்மை கடிதம் இணைக்கப்பட் டிருக்க வேண்டும். பட்டாசு உரிமம் பெறுவதற்கான மாநக ராட்சி கட்டட உரிமக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த ஆவணங்களுடன் செப்.30 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பம் சமர்ப் பிக்க வேண்டும். முழுமையாகப் பெறப்படும் விண்ணப் பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். சம் பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டு காவல் துறை, தீய ணைப்புத் துறை திருப்தியடையும் பட்சத்தில் மட்டுமே தற்காலிக உரிமம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட் டுள்ளது.
புதிய திட்டப்பணி மாவட்ட ஆட்சியர் துவக்கி வைப்பு
திருப்பூர், செப்.17- அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேவர் பிளாக் மற் றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம் அருள்புரம் உப்பி லிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சமூக பங்களிப்பு நிதியின் கீழ் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் திங்களன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட சுகாதார அலுவலர் முரளி சங்கர், வட்டார மருத்துவ அலுவலர் சுடர்விழி, மருத்துவ அலுவ லர் சாகிதா பர்வீன், கரைபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி கோவிந்தராஜ், சமூக பங்களிப்பு நிதி வழங்கிய நிறு வனத்தினர், மருத்துவர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.
பேருந்து வசதி ஏற்படுத்திதரக் கோரிக்கை
ஈரோடு, செப்.17- பேருந்து வசதி ஏற்படுத்தி தரக்கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், நற்ரூர், ராமநா தபுரம் மற்றும் பழையூர் ஆகிய பகுதிகள் விவசாயத் தொழி லாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகளா கும். அங்கு பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும் அதிகளவில் உள்ளனர். இந்நிலையில் அப்பகுதிக்கு பேருந்து கள் இயக்கப்படாததால் சுமார் 3 கி.மீ. தூரம் நடந்து சென்று பேருந்தைப் பிடிக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இதேபோன்று, பெருந்துறை ஒன்றியத்துக்குட்பட்ட காஞ்சிக்கோயில், நசியனூர் பகுதிகளில் மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. ஈரோட்டில் இருந்து கவுந் தப்பாடி செல்லும் பேருந்துகளான 8D, 8E ஆகியவை நசியனூ ரில் இருந்து சாமிக்கவுண்டன்பாளையம் பிரிவு, குருச்சான் வலசு, அலமேடு, குமரன் மலை, காஞ்சிகோயில் வழியாக சென்று வந்தன. கடந்த 3 மாதங்களாக முற்பகல் 11 மணி, பகல் 1:30 மணிக்கு இயக்கப்பட்ட பேருந்துகள் தற்போது இயக்கப்படுவதில்லை. தற்போது காலாண்டு தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், தேர்விற்கு மாணவ, மாணவி கள் உரிய நேரத்தில் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி பேருந்து களை மீண்டும் குறிப்பிட்ட நேரத்திற்கு இயக்க நடவடிக்கை எடுக்கக்கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் அப்பகுதி பொது மக்கள் மனு அளித்தனர்.
விபத்தில் இளைஞர் பலி
ஈரோடு, செப்.17- ஆப்பக்கூடல் அருகே நடைபெற்ற சாலை விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், அத்தாணி பிரதான சாலை பகுதி யைச் சேர்ந்தவர் ரகுவரன் (26). இவர், அத்தாணி - சத்தி சாலை யில் ஞாயியிறன்று இரவு நடந்து சென்றுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காய மடைந்தார். இவரை மீட்ட அப்பகுதியினா் கோபி அரசு மருத்து வமனையில் சோ்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ரகுவரன் உயிரிழந்தார். இதுகுறித்து, ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காங்கிரஸ் புகார்
ஈரோடு, செப். 17- ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் கூறியதாவது, நாடாளுமன்ற எதிர்க் கட்சி தலைவரான காங்கிரசின் ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவர்களுக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும் என சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கூறியுள்ளார். அவரது தரக்குறைவான பேச்சு மற்றும் கொலை வெறியால் ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது. எனவே, சஞ்சய் கெய்க்வாட்டை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தெற்கு மாவட்டத் தலைவர் மக்கள் ஜி. ராஜன் தலைமையில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் தில் மனு கொடுக்கப்பட்டது.
கிராமத்து குட்டையில் முதலை
மேட்டுப்பாளையம், செப்.17- மேட்டுப்பாளையம் அருகே பட்டக்காரனூர் கிராமத் குட்டையில் முதலை இருப்பதால் அதை வலை கட்டி பிடிக்க வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். மேட்டுப்பாளையம் அருகே உள்ள பள்ளேபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பட்டக்காரனூர் கிராமத்தில் நீர்வழி குட்டை ஒன்று உள்ளது. இக்குட்டையில், கடந்தாண்டு பெய்த கன மழையால் தற்போது வரை தண்ணீர் தேங்கி உள்ளது. கடந்த 8 மாதங்களாக இந்த குட்டையில் 10 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அதில் முதலை நடமாட்டம் இருப் பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், செவ்வாயன்று குடியிருப்புகள் அருகே அமைந்துள்ள இந்த குட்டையில் முதலை இருப்பதை நேரில் கண்ட உள்ளூர் பொதுமக்கள் இது குறித்து சிறுமுகை வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், குட்டையை சுற்றி நைலான் வலையை கட்டி தண்ணீரை வெளியேற்றி வரு கின்றனர். குட்டையில் உள்ள தண்ணீர் குறையும் போது முதலையை சுற்றி வளைத்து பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
அதிவேகத்தில் செல்லும் தனியார் பேருந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
நாமக்கல், செப்.17- அதிவேகமாக செல்லும் தனியார் பேருந்துகளால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆட்டை யாம்பட்டி பிரிவு சாலையில், பேருந்தில் பயணிகள் படிக் கட்டில் ஆபத்தான முறையில் தொங்கியவாறு பயணம் மேற்கொண்டுள்ளனர். பயணிகள் படிக்கட்டில் தொங்குவது கூட தெரியாமல் ஓட்டுநர் பேருந்தை அதிவேகத்தில் இயக்கி யுள்ளார். பேருந்தை பின் தொடர்ந்து வந்த காரில் வந்த நபர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். பேருந்தில் படிக்கட்டில் தொங்கியவாறு ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள் வது மற்றும் அதிவேகமாக செல்வது குறித்து வீடியோவை தற்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டில் தொடர் விடுமுறை மற்றும் முகூர்த்த தினத்தை முன் னிட்டு, பல்வேறு பகுதிகளில் பேருந்துகளில் பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணம் செல்கின்றனர். ஒரு சில பேருந்துகளில் பயணிகள் பேருந்து படிக்கட்டுகளில் ஆபத் தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இதுபோல அதிவேகமாக மற்றும் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லும் தனியார் பேருந்துகள் மீது போக்குவரத்து காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆயுதப்படை பெண் காவலர்களுக்கு பாலியல் தொல்லை
சேலம், செப்17– சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு, உடன் பணியாற்றும் காவலர் ஒருவர் பாலி யல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. சேலம் மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் 2 பெண் காவலர்களுக்கு, உடன் பணியாற்றும் சக காவ லரே பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக பெண் காவலர்கள் அளித்த புகாரின் பேரில், சம்பந்தப் பட்ட 5 காவலர்களை வேறு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்ய ஆயுதப்படை அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஆனால், மேல் அதிகாரி ஒருவர் அந்த அறிக்கையை கிழித்து போட்டுவிட்டு, எச்சரிக்கை மெமோ மட்டும் கொடுக்கும் படி உத்தரவிட்டதாகவும், புகார் அளித்த பெண் போலீசாரையும் அழைத்து எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், புகார் அளித்த பெண் போலீசாருக்கு பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வந்துள்ளனர். இதனால் பொறுமை இழந்த பெண் போலீசார், இச்சம்பவம் தொடர்பாக தமிழக காவல் துறை இயக்குநருக்கு 6 பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதையடுத்து அந்த கடிதத்தை சேலம் மாநகர காவல் ஆணையாளருக்கு அனுப்பி, இதுதொ டர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் கடிதத்தில் இருக்கும் பெண் காவலரை அழைத்து காவல் ஆணையர் ரகசியமாக விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், புகாருக் குள்ளான நபர் உயர் அதிகாரி ஒருவரின் நெருங்கிய உற வினர் என்பதால் இந்த புகார் தொடர்பாக எந்தவொரு மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. ஆனால், இந்த புகார் தொடர் பாக தனிக்குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருவதாக காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இச்சம் பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்ப டுத்தியுள்ளது.
தெரு நாய்களால் விவசாயிகளுக்கு பொருளாதார இழப்பு: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சிபிஎம் கோரிக்கை
திருப்பூர், செப்.17 - தெரு நாய்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்டு வரும் பொருளாதார இழப்பை தடுக்க தமிழக முதல்வர் உரிய நடவ டிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண் ணன் தமிழக முதல்வருக்கு அனுப்பி இருக்கும் கடிதத்தில் கூறியிருப்பதா வது, சமீப காலமாக திருப்பூர் மாவட்டத் தில் ஊர் நாய்கள் கூட்டமாக சேர்ந்து கொண்டு விவசாயிகளின் வாழ்வாதார மாக இருக்க கூடிய செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் மற்றும் கன்று குட்டிகள் ஆகியவற்றை கடித்து கொன்று வருகின்றன. கடந்த சனியன்று அதிகாலை காங் கேயம் வட்டம், கீரனூர் அருகில் மறவ பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவ சாயி பொன்னுச்சாமியின் விவசாய பூமியில் தெரு நாய்கள் தாக்குதல் சம்ப வத்தில் 16 ஆடுகள் உயிரிழந்துள்ளன. லட்சக்கணக்கான மதிப்புள்ள ஆடு களை இழந்து விவசாயி தவித்து வரு கிறார். இப்படிப்பட்ட நாய்களால் விவ சாயிகளின் ஒரே ஆதாரமாக இருக்கக்கூ டிய கால்நடைகள் பாதிப்பது தொடர்க தையாக இருக்கின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் குறைதீர் கூட்டங்களில் விவசாய சங்கங் களின் தலைவர்கள் பலமுறை எடுத்து ரைத்தும், மாவட்ட நிர்வாகமும், அரசும் உரிய நடவடிக்கையோ, வழிகாட்டுத லையோ, மேற்கொள்ளவில்லை. திருப் பூர் மாவட்டத்தில் மற்றும் அருகாமை ஈரோடு மாவட்டத்திலும் சமீப காலத் தில் மட்டும் இது போன்று பல சம்ப வங்கள் நடந்துள்ளன. இழப்பை சந்தித் துள்ள விவசாயிகள் செய்வதறியாது தவிக்கின்றனர். கால்நடைகளை வளர்த்து வரும் விவசாயிகள், இது போன்ற சம்பவங்களில் இருந்து கால் நடைகளை எப்படி பாதுகாப்பது என்று அச்சமுடன் உள்ளனர். நாய்கள் பிரச் சனையில் தங்களுக்கு பொறுப்பு இல்லை என்று கால்நடை துறை தெரி வித்து விட்டது. கட்டுப்படுத்த வேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநக ராட்சி நிர்வாகங்கள் இதைப் பற்றி கவலை கொள்ளாத நிலையில் உள் ளன. ஆகவே விவசாயிகளின், கால் நடை வளர்ப்பவர்களின் முக்கிய பொரு ளாதார ஆதாரமாக இருக்கிற ஆடு, கன்று குட்டிகளை, தெரு நாய் கூட்டங்க ளிடமிருந்து பாதுகாப்பதற்கு அரசு உரிய திட்டங்களையும், செயல்பாடுக ளையும் வகுக்க வேண்டும் என்றும், நாய்களை கட்டுப்படுத்துவது ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பொறுப்பு என்பதை உணரச் செய்து இப்பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்வதாக செ.முத்துக்கண்ணன் கூறியிருக்கிறார்.
ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வலியுறுத்தல்
சேலம், செப்.17- ஓமலூர் அருகே சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சிக்குட்பட்ட கிழக்கத்திகாடு கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத் திற்கு பேருந்து வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் என பலதரப்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்ப குதியைச் சேர்ந்த மாணவர்கள் ஒரு கிலோ மீட்டர் தொலை விலுள்ள சக்கரைசெட்டியப்பட்டி அரசு உயர்நிலைப்பள் ளிக்கு சென்று வருகின்றனர். ஆனால், அவ்வழியில் குறுக்கி டும் சரபங்கா ஆற்றில் வருடக்கணக்கில் தண்ணீர் தேங்கி நிற்கி றது. மேலும், அதிக மழை பொழிவின் போது இந்த சரபங்கா ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் ஓடுகிறது. அந்த சமயத்தில் பள்ளி செல்லும் குழந்தைகள் சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. சரபங்கா ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவில் செல்லும் பொழுது ஆபத்தான முறையில் தண்ணீரைக் கடந்து பள்ளி குழந்தைகள் செல்கின்றனர். அப்படி பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளை காலை மாலை என இரு வேளையும் பெற்றோர்கள் காத்திருந்து அழைத்து வருகின்றனர். இதனால், வேலைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. எனவே, தங்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்துத்தர தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி யுள்ளனர்.
தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு நடைமேம்பாலம் அமைக்க கோரிக்கை
தருமபுரி, செப்.17- தருமபுரி அரசு கலைக்கல்லூரி முன்பு, மாணவர்களின் நலன்கருதி நடைமேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி தாலுகா, நார்த்தம் பட்டி கிராம மக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இவர்கள் காலையில் கல்லூரி செல்வதற்காக, தருமபுரி - சேலம் செல்லும் சாலையை கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி, அரசு கலைக்கல்லூரி முன்பு, நடைமேம்பாலம் அமைக்க வேண்டும். இதேபோல் நான்குரோடு, அரசு மருத்துவமனை, ஒட்டப்பட்டி பிரிவு சாலை, நல்லம்பள்ளி, லளிகம் பிரிவு சாலை ஆகிய இடங்களில், போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும், என வலியுறுத்தப்பட்டுள்ளது.
வாழைத்தார்களின் விலை உயர்வு
நாமக்கல், செப்.17- பரமத்தி வேலுாரில் தினசரி ஏல மார்க்கெட்டில் வாழைத் தார்களின் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த னர். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலுார் தாலுகா பாண்ட மங்கலம், பொத்தனுார், நன்செய் இடையாறு, குப்பிச்சி பாளையம், மோகனுார், பரமத்தி வேலுார், அண்ணா நகர், பிலிக்கல்பாளையம், ஆனங்கூர், ஜேடர்பாளையம், கொத்த மங்கலம், சிறுநல்லிக்கோவில், அய்யம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், விவசாயிகள் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ள னர். இங்கு, பூவன், பச்சைநாடன், கற்பூரவல்லி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வகையான வாழைகளை பயிரிட்டுள்ள னர். அங்கு விளைந்த வாழைத்தார்களை வெட்டி, பரமத்தி வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டில் விற் பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, திங்களன்று நடந்த ஏலத்தில், கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், 600 ரூபாய்க்கும், 300 ரூபாய்க்கு விற்ற ரஸ்தாளி, 500 ரூபாய்க்கும், 350 ரூபாய்க்கு விற்ற கற்பூரவல்லி, 550 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த விலை உயர் வால், வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
எடப்பாடியில் இன்று மின்தடை
சேலம், செப்.17- எடப்பாடியில் புதனன்று (இன்று) மின் விநியோகம் இருக் காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே உள்ள குரும்பப்பட்டி துணை மின் நிலையத்தில் புதனன்று (இன்று) மாதாந்திர பரா மரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. இதனால் எடப்பாடி நக ரம், வி.என்.பாளையம், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பப் பட்டி, வேலம்மாவலசு, மலையனூர், தங்காயூர், அம்மன் காட்டூர், கொங்கணாபுரம், எருமைப்பட்டி உள்ளிட்ட பகுதி களில் புதனன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காதென, மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் தமிழ்மணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகதோஷம் இருப்பதாகக்கூறி பெண் தர மறுப்பு
வேதனையில் வாலிபர் தற்கொலை: போலீசார் விசாரணை
தருமபுரி, செப்.17- ஜாதகத்தில் நாகதோஷம் இருப்ப தாகக்கூறி பெண் தர மறுத்ததால், மனவேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், அரகாசனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு முருகவள்ளி (50) என்ற மனைவியும், மூன்று மகள்களும், ஒரு மகனும் உள் ளனர். இந்நிலையில் மகன் விஜய் (26) என்பவருக்கு பெற்றோர் திருமணம் ஏற் பாடு செய்து வந்துள்ளனர். அதே ஊரைச் சேர்ந்த தனலட்சுமி மகள் இனியா, என்ப வரை இருவீட்டாரும் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதனிடையே, விஜய்-யின் ஜாதகத்தில் நாகதோஷம் இருப்பதாகக்கூறி, பெண் வீட்டார் திரு மணத்திற்கு மறுத்துவிட்டனர். இதனால் மனமுடைந்த விஜய், இனியாவிடம் சென்று திருமணம் செய்து கொள்ள கேட்டுள்ளார். இனியா, விஜய்-யின் பெற் றோருக்கு தகவல் தெரிவித்ததால், விஜயை வீட்டிற்கு அழைத்துள்ளனர். அப்போது விஜய் கையில் வைத்தி ருந்த பெட்ரோலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அங்கிருந் தவர்கள் அவரை தீ காயங்களுடன் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்துள்ளனர். இதன்பின் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மீண்டும் சிகிச்சைக்காக கடந்த செப்.14 ஆம் தேதி தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த விஜய், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பெரும்பாலை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது.
சதுரங்கப் போட்டி
நாமக்கல், செப்.17- தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் கோப்பைக் கான விளையாட்டுப் போட்டி அந்தந்த மாவட்ட தலைநக ரங்களில் உள்ள விளை யாட்டு மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், 15 வகையான போட் டிகள் உள்ளன. முதல் மூன்று இடங்களைப் பிடிப்போர் மாநில அளவிலான போட் டிக்கு தகுதி பெறுவர். நாமக் கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் செப்.23 ஆம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடைபெற உள் ளன. இந்நிலையில், அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான சதுரங் கப் போட்டி திங்களன்று, மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. 90 பேர் பங்கேற்ற இப் போட்டி, 6 சுற்றுக்களாக நடை பெற்றது. இதில் புள்ளிகள் அடிப்படையில் மாணவர் பிரிவில், நாமக்கல் கால் நடை மருத்துவக்கல்லூரி மாணவர் ஜி.கார்த்திக் குஹன் முதலிடத்தையும், நாமக்கல் மருத்துவக்கல் லூரி மாணவர் வி.கெளதம் இரண்டாமிடத்தையும், ராசி புரம் முத்தாயம்மாள் கல் லூரி மாணவர் பி.தன்வந்த் மூன்றாம் இடத்தையும் பிடித் தனர். இதேபோல், மாணவிகள் பிரிவில், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல் லூரி மாணவி பி.விஷ்ணு பிரியா முதலிடத்தையும், அதேகல்லூரி மாணவி ஜி. தாரணி இரண்டாமிடத்தை யும், கே.எஸ்.ஆர். மகளிர் கல் லூரி மாணவி பி.குணலட்சுமி மூன்றாம் இடத்தையும் பிடித் தனர். இந்த 6 பேரும் மாநில அளவிலான போட்டியில் பங் கேற்க உள்ளனர்.