கோவை, ஏப்.27- பொருளாதாரத்தில் நலிவடைந் தோருக்கு கட்டப்படும் அடுக்குமாடி குடி யிருப்புகளை கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கோவை மாவட்டம், வெள்ளக் கிணறு பகுதியில் 53 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 1,006 மனை கள் கட்டப்பட்டு வருகின்றன. இதே போல் பொருளாதாரத்தில் நலிவடைந் தோர் பிரிவுக்காக பெரியநாயக்கன் பாளையத்தில் சுமார் 10.81 ஏக்கரில் ரூ.152.87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த குடியி ருப்புகளை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். இதன்பின், கவுண்டம்பாளையம் பகுதியில் அரசுப் பள்ளி மாணவ, மாண வியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை நேரில் பார்வையிட்டு, அம் மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப் படும் மதிய உணவின் தரத்தினை பரி சோதித்து பார்த்தார். இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் கே.ரவிச் சந்திரன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம் -3) பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் பூபதி உட் பட தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலு வலர்கள் பலர் உடனிருந்தனர்.