districts

ரயான் மற்றும் காட்டன் துணியின் விலை கடும் வீழ்ச்சி

ஈரோடு, ஜூன் 15- ரயான் மற்றும் காட்டன் துணி யின் விலை கடும் வீழ்ச்சி அடைந் துள்ள நிலையில், ஒன்றிய அரசு  வெளிநாட்டிலிருந்து எவ்வித கட் டுப்பாடு இன்றி மூலப்பொருளை இறக்குமதி செய்து, நம் நாட்டில் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத் தறி சங்கங்களின் கூட்டமைப் பினர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி யுள்ளனர்.  ஈரோடு மாவட்டத்தில் 50 ஆயி ரத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. கொங்கு மண்டலத்தில் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் மற்றும் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட  தானி யங்கி தறிகள் உள்ளன. இவற்றில் ரயான் மற்றும் காட்டன் துணி ஒரு  நாளைக்கு 1.5 கோடி மீட்டருக்கு  மேல் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆறு மாதங்களாக இலவச  வேட்டி, சேலை உற்பத்தி நடை பெற்றது. இதன் காரணமாக ரயான்  துணி உற்பத்தி குறைந்தது. இவற்றை லாபம் இல்லாவிட் டாலும், சீராக விலை கொடுத்து வட இந்திய வியாபாரிகள் கொள் முதல் செய்து வந்தனர். இந்நிலையில், வட மாநிலங் களில் ரயான் துணிக்கு பதில்  பாலிஸ்டர், நைலான் போன்ற துணி கள் குறைந்த விலையில் கிடைக் கிறது. இவை அகமதாபாத், தில்லி,  மும்பை போன்ற பெருநகர சந்தை களுக்குச் செல்கிறது. இதனால் வியாபாரிகள் ரயான் துணிகளை கொள்முதல் செய்வதை படிப்படி யாக குறைத்துக் கொண்டனர். கடந்த மாதத்தில் 120 கிராம் எடை கொண்ட துணியின் (ஒரு  மீட்டர்) விலை 25 ரூபாய் 50 பைசா வுக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 23 ரூபாய் முதல்  23.25 வரை மட்டுமே வியாபாரிகள் விலை கேட்கிறார்கள். அதேபோல 140 கிராம் எனப்படும் துணியின் விலை கடந்த மாதத்தில் 30 ரூபாய் 50 பைசா இருந்தது. தற் போது படிப்படியாக குறைந்து 28.25 ரூபாய் என்று விற்பனை நடை பெறுகிறது. அனைத்து ரகங்களும்  இரண்டு முதல் இரண்டு ரூபாய் 50 பைசா வரை குறைத்து வியாபாரம் நடைபெறுகிறது. ஏற்கனவே ரயான் உற்பத்தி செய்த விசைத்தறியாளர் கள் நட்டத்தில் தொழிலை நடத்தி வந்தனர். தற்போது மேலும் நூல்  விலைக்கு கூட துணி விலை வைக்க  முடியாத சூழல் ஏற்பட்டு முழுமை யான உற்பத்தி கூலியை இழந்து உள்ளனர்.

கடந்த ஆறு மாதங்களாக நூல்  விலையில் பெரும் மாற்றங்கள் இல்லாவிட்டாலும், கடந்த 15 நாளில் கிலோவுக்கு நான்கு முதல் ஆறு ரூபாய் உயர்ந்து உள்ளது.  அதேபோல் காட்டன் விலை வருங்காலத்தில் குறையும் என்ற காரணத்தால் துணியின் விலை சரியும் என்று எதிர்பார்ப்பில்  வாங்குபவர்கள் நினைத்துள்ள காரணத்தால் மேலும் ஆர்டர் இல் லாமல் உள்ளது. ஒரு வாரத்தில் 13 ஷிப்ட் ஏற்கப் படும் விசைத்தறிக்கூடங்கள் படிப் படியாக தங்கள் உற்பத்தியை  குறைத்து, அதாவது வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை உற்பத்தியை குறைத்துள்ளனர். இதன் மூலம் ஒரு வாரத்திற்கு ரூ.3 ஆயிரம் சம்பளம் பெறும் தொழிலா ளிகள் 500 முதல் 1000 ரூபாய் வரை இழக்கின்றனர். இதே நிலை தொடரும் பட்சத்தில் கடந்த ஆறு  மாதங்களுக்கு முன்பு நடந்தது போல், விசைத்தறிகள் உடைப் புக்கு செல்லும் சூழல் ஏற்படும். தமிழ்நாடு முதல்வர் ஏற்கனவே, அனைத்து துறையின் சீருடைக ளும் விசைத்தறி கூட்டுறவு சங்கங் கள் மூலம் விசைத்தறியில் நெய் யப்படும் என்ற உறுதியை கொடுத் திருந்தார். அந்த உறுதியை உடன டியாக செயல்படுத்துவதன் மூலம் விசைத்தறி தொழிலை காக்க முடி யும். அதேபோல் ஒன்றிய அரசு ஜவுளித் துறையினர் ஏற்றுமதிக்கு வழிவகை செய்தால் மட்டுமே விசைத்தறி தொழில் காக்கப்படும்.  பல ஏற்றுமதியாளர்கள் நம்மிடம் வாங்குவதை குறைத்துக் கொண்டு  உள்ளனர். இதற்கு காரணம் நம்  நாட்டில் தயாரிக்கப்படும் மூலப் பொருளின் விலை அதிகம் என்ற  காரணத்தால், துணியின் விலை  அதிகமாகி உள்ளது. அதனை கட் டுப்படுத்தும் வகையில் ஒன்றிய  அரசு வெளிநாட்டிலிருந்து எவ்வித  கட்டுப்பாடு இன்றி மூலப்பொ ருளை இறக்குமதி செய்து, நம் நாட் டில் குறைந்த விலையில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்று மதி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என தமிழ்நாடு விசைத் தறி சங்கங்களின் கூட்டமைப்பி னர் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி யுள்ளனர்.