கோவை, நவ.16- குழந்தைகளுக்கு எதி ரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்தும் வகையில், கோவை முதல் கோவா வரை இருசக்கர வாகன பயணத்தை ரோட்டரியல் இன்டஸ்ட்ரி சிட்டியினர் முன்னெடுத்துள்ளர். கோவை மாவட்ட ரோட்டரியல் இன் டஸ்ட்ரி சிட்டி சார்பாக குழந்தைகள் தினத்தை முன்னிட்டும், உலக குழந்தைகள் வாரத்தை முன்னிட்டும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை முதல் கோவா வரை செல்லும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளப் படுகிறது. இதில் 25 இரு சக்கர வாக னங்கள் பங்கேற்கின்றன. இந்த பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பால கிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்து, இதில் பங்கு பெறுவோர்க்கு பாராட்டுகளையும் தெரிவித்தார். இவ்விழாவில், ரோட்டேரியன் ராஜ் மோகன் நாயர், ரோட்டரியல் இன்டஸ்ட்ரி சிட்டி நிறுவன தலைவர் பிரபு சங்கர், கிளப் நிர்வாகிகளான கனகராஜ், சபி உல்லா, உமா பிரபு, சண்முகானந்தம், பிரேம் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.