கோவை, செப்.12- ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியினர் கோவை யில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர். வரலாறு காணாத விலை வாசி உயர்வு, வெறுப்பு அர சியல் உள்ளிட்ட மக்கள் விரோத ஆட்சி நடத்தும், மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந் தது. இதன் ஒருபகுதியாக கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள மத்திய தந்தி அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் மாநிலப் பொருளாளர் எம்.ஆறுமுகம், மாவட்டச் செயலாளர் சி. சிவசாமி, பொருளாளர் சி.தங்கவேல் உள் ளிட்ட திரளானோர் பங்கேற்றனர். முன்னதாக, ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக தந்தி அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக வந்தனர். இவர் களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய் தனர். இதுபோன்று சேலம், நாமக்கல் உள் ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது.