districts

img

மதுக்கடைக்கு எதிர்ப்பு: ஊராட்சித் தலைவர் தற்கொலை முயற்சி

தருமபுரி, பிப்.19- கடத்தூர் அருகே அரசு மது பானக் கடை திறக்கும் முடிவை கைவிட வலியுறுத்தி, தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி மன்றத் தலைவர் ஆறு முகம் தீக்குளிக்க முயற்சித்த சம்ப வம் அப்பகுதியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம், ஓசஅள்ளி  ஊராட்சிக்குட்பட்டு வேடியூர், போசி நாயக்கனள்ளி கிராமங்கள் உள் ளன. கடத்தூர் செல்லும் வழியில்  பொருமாகோயில்பட்டி சாலையி லுள்ள சரோஜா கார்த்திகேயன் என் பவருக்கு சொந்தமான நிலத்தில், அரசு சார்பில் புதிய மதுபானக் கடை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு மதுபானக் கடை திறக்கப் பட்டால், ஓசஅள்ளி ஊராட்சிக்குட் பட்ட பகுதியில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். அதே போல் அவ்வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி  மாணவ, மாணவியர்கள் பயணிப்ப தால், அவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. அதேசமயம் இப்ப குதியில் அரசு மதுக்கடை திறப் பதை ஒருவர் கூட ஏற்கவில்லை. இத னிடையே, இப்பகுதியில் மதுபா னக் கடை திறக்க எதிர்ப்பு தெரி வித்து ஓசஅள்ளி ஊராட்சி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஊராட்சி மக்க ளின் முடிவிற்கு மதிப்பளிக்காமல் மாவட்ட நிர்வாகம் மதுபானக் கடை திறக்க ஏற்பாடு செய்து வருகிறது. இதனை கண்டித்தும், மதுபா னக் கடை திறக்கும் முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் ஓச அள்ளி ஊராட்சி மன்றத் தலைவர் ஆறுமுகம் உட்பட பலர், தருமபுரி  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மண்ணெண்ணையை ஊற்றி தீக் குளிக்க முயன்றனர். இதனை அங் கிருந்த போலீசார் தடுத்தி நிறுத்தி னர். அதன்பின் ஊராட்சி மன்றத் தலைவர் அங்கேயே அமர்ந்து தர் ணாவில் ஈடுபட்டார். இதைத்தொ டர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர்  பால்பிரின்லி ராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் கெளரவகுமார் ஆகி யோர் நேரில் பேச்சுவார்த்தை நடத் தினர். அப்போது, அப்பகுதியில் மதுபானக் கடை அமைக்கப்பட மாட் டாது என அதிகாரிகள் உறுதியளித் தனர். அதன்பேரில், போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத் தால் அப்பகுதியில் பெரும் பர பரப்பு ஏற்பட்டது.