கோபி, செப். 6- கோபிசெட்டிபாளையம் வட்டார போக்குவரத்து அலுவலகத் தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் லஞ்ச பணம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்து மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் லஞ்ச பணம் வசூலித்து கொடுத்த இருவரிடம் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து (பொறுப்பு) அலுவலராக பெருந்துறை வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சக்தி வேல், மோட்டார் வாகன ஆய்வாள ராக ரவிக்குமார் இருந்து வந்துள்ள னர். கோபி மோட்டார் வாகன ஆய்வா ளர் ரவிக்குமார் விடுப்பில் சென்ற தால் கடந்த சில தினங்களுக்கு முன் பவானி மோட்டார் வாகன ஆய்வா ளர் குணசேகரன் (பொறுப்பு) நிய மித்து பணியில் ஈடுபட்டு வந்துள் ளார். இந்நிலையில், கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புதிய ஓட்டுநர் உரிமம், வாகனப்பதிவு, பதிவெண், வாகன தரசான்று, சாலை வரி புதுப்பிதல், உள்ளிட்டவைக ளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்க ணிப்பு பிரிவு (லஞ்ச ஒழிப்பு) காவல் துறையினருக்கு புகார் தெரிவித்துள் ளனர். புகாரின் பேரில் கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறையினர் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜேஷ் தலைமையில் ஆய்வாளர் ரேகா உட்பட 7 பேர் கொண்டக் குழு திடீர் சோதனை மேற்கொண்டனர். அப் போது வட்டார போக்குவரத்து அலு வலகத்தில் இருந்த 10க்கும் மேற் பட்ட இடைதரகர்கள், அலுவலர்களி டம் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் ஒவ்வொரு இடைத ரகர்கள் துண்டு சீட்டுகளில் பெயர்க ளுடன் எழுதி லஞ்சம் கொடுத்ததில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை கைபற்றி விசாரணை மேற்கொண்ட னர். அதில், மோட்டார் வாகன ஆய் வாளர் குணசேகரன் லஞ்சம் பணம் வசூலிக்க தனியாக செந்தில் என்ப வரை நியமித்து இடைதரகர்களிடம் லஞ்ச பணம் பெற்று மோட்டார் வாகன ஆய்வாளருக்கு கொடுத்து வந்துள்ளார் என்பது தெரியவந்து. வெள்ளியன்று வழக்கம்போல் அலு வலகத்தில் இருந்த 7 இடைதர கர்கள் துண்டு சீட்டுகளில் எழுதி பணத்தை லஞ்சமாக கொடுத்தி ருந்ததும் தெரிய வந்தது. பணத்தை கைபற்றிய லஞ்ச ஒழிப்புதுறையி னர் மோட்டார் வாகன ஆய்வாளர் குணசேகரன் மற்றும் லஞ்ச பணம் வசூலித்து கொடுத்த செந்தில் ஆகி யோரிடம் தொடர்ந்து விசாரணை யில் ஈடுபட்டனர்.