தருமபுரி, ஜன.27- விவசாயிகளுக்கு விரோத ஒன்றிய மோடி அரசை கண்டித்து, அகில இந்திய அளவி லான டிராக்டர் பேரணி நடத்த அகில இந்திய விவசாயிகள் சங்கம் இணைந்த ஐக்கிய விவ சாயிகள் முன்னணி அறைகூவல் விடுத்தி ருந்த நிலையில், குடியரசு தினத்தன்று டிராக் டர் பேரணி நடைபெற்றது. விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டம் இயற்ற வேண்டும், அரசு கொள்முதலை உத் தரவாதப்படுத்த வேண்டும், வேளாண் விஞ் ஞானி சுவாமிநாதன் குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். மின்சார திருத்த சட்ட மசோதாவை கைவிட வேண்டும். சிறு,குறு நடுத்தர விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து, தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் டிராக்டர் பேரணி நடத்தினர். தருமபுரி மாவட்டம், அரூர் ரவுண்டானா அருகே நடைபெற்ற பேரணிக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலை வர் கே.என்.மல்லையன் தலைமை வகித் தார். மாவட்ட பொருளாளர் சி.வஞ்சி, துணைத் தலைவர் எஸ்.தீர்த்தகிரி, துணைச்செயலா ளர் ஏ.நேரு உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினர். இதில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மல் லிகா, ஒன்றிய செயலாளர்கள் அரூர் பி. குமார், மொரப்பூர் கே.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்தி உரையாற்றினர். முன்னதாக, அரூர் ரவுண்டானா அருகில் துவங்கிய பேரணி பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நிறைவடைந்தது.
இதேபோன்று, பென்னாகரத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில், பாஜகவின் விவசாய விரோத கொள்கைகளை கண் டித்து டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் பேரணி நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாவட்ட செயலாளரும், ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாள ருமான சோ.அர்ஜுனன் தலைமை தாங்கி னார். பென்னாகரம் முத்துகவுண்டர் திருமண மண்டபத்திலிருந்து துவங்கிய பேரணி நாக மரை ரோடு, வட்டாட்சியர் அலுவலகம், கடை வீதி, பழைய பேருந்து நிலையம், முள்ளு வாடி, புதிய பேருந்து நிலையம் வழியாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை அருகே உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நிறைவுற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் குமார், துணைச்செய லாளர் ஆ.ஜீவானந்தம், விவசாய தொழிலா ளர் சங்க மாவட்ட பொருளாளர் எம்.சிவா மற் றும் சிபிஐ, சிபிஐ (எம்எல்), மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண் டனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியில், ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் நடை பெற்ற டிராக்டர் பேரணிக்கு, மு.து.செல்வ ராஜ் தலைமை தாங்கினார். எருமைப்பட்டி கைகாட்டி பகுதியில் இருந்து துவங்கிய டிராக்டர் பேரணி, எருமப்பட்டி பேருந்து நிலை யத்தில் முடிவடைந்தது. முன்னதாக ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் உதவிச்செயலா ளர் வி.சதாசிவம் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். இதில், பால் உற்பத்தியா ளர் சங்க மாவட்ட பொருளாளர் பி.தங்கரத்தி னம், விவசாயிகள் சங்க மாவட்ட உதவிச்செய லாளர் பி.ஜோதி, வாலிபர் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவை
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சங்கத் தின் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, டிராக்டர்களுடன் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கினைப்பாளர் சு.பழனிச்சாமி தலைமை தாங்கினார். இதில், விவசாய சங்க மாவட்ட செயலாளர் வி.ஆர்.பழனிச்சாமி, கட்சி சார்பற்ற விவசாயி கள் சங்க நிர்வாகி ஆறுச்சாமி, மக்கள் அதி காரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் மூர்த்தி, புரட்சிகர இளைஞர் முன்னணியின் தமிழ் சான்றோன் உள்ளிட்டோர் உரையாற்றி னர். முடிவில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைச்செயலாளர் பெரியசாமி நன்றி கூறி னார்.
சேலம்
ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் சேலம் காந்தி ரோடு முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை டிராக்டர் பேரணி நடை பெற்றது. ஐக்கிய விவசாயிகள் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.ராமமூர்த்தி பேர ணிக்கு தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில துணை தலைவர் எம்.லகுமய்யா, ஐக்கிய விவசாயிகள் சங்கத் தலைவர் ஆர்.சங்கரய்யா, தமிழ்நாடு விவ சாய சங்க மாவட்ட தலைவர் அன்பழகன், ஏஐகேகேஎம்எஸ் மாவட்ட பொறுப்பாளர் வி.அய்யந்துரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் பி.தங்க வேலு, ஏஐகேகேஎம்எஸ் மாவட்ட தலைவர் பி.மோகன் உள்ளிட்ட திரளனோர் பங்கேற் றனர்.