districts

img

குழந்தை விற்பனை: மேலும் ஒரு இடைத்தரகர் கைது

நாமக்கல், அக்.17-  நாமக்கல் அருகே குழந்தை விற்பனையில் தொடர்புடைய மேலும் ஒரு இடைத்தரகர் கைது  செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்து வமனையில் மருத்துவராக பணி யாற்றியவர் அனுராதா. இவர் ஸ்ரீ சிகாமணி மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர், இடைத் தரகர்கள் மூலம் குழந்தைகளை  விற்பது தெரியவந்தது. இதனை யடுத்து, காவல்துறையினர், மருத் துவர் அனுராதா, இடைத்தரகர் லோகாம்பாள் ஆகியோர் மீது  வழக்குப் பதிவு செய்து இருவரை யும் கைது செய்தனர். மேலும், இவர் களோடு பலர் தொடர்பு இருக்கக் கூடும் என்பதால், தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை  மேற்கொண்டு வருவதாக, சுகா தாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இடைத் தரகர் பாலாமணியை போலீசார்  கைது செய்தனர். அவரிடம் காவல் துறையினர் தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். யாருக் கெல்லாம் குழந்தைகள் விற்பனை நடைபெற்றுள்ளது. உறுப்பு விற் பனை செய்யப்பட்டதா எனவும்,  பாலாமணியுடன் தொடர்பில் உள்ள வர்கள் குறித்தும் காவல்துறை யினர் விசாரித்து வருகின்றனர். மேலும் தனிப்படை போலீசார், சேலம் மற்றும் கரூர் பகுதியில் உள்ள இடைத்தரகர்களை பிடிப் பதற்காக விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட அரசு மருத் துவர் அனுராதாவின் ஸ்ரீ சிகாமணி மருத்துவமனையை வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். இதேபோல் தேர் நிலை அருகே  உள்ள தனியார் மருத்துவமனை யில் அவர் பயன்படுத்தி வந்த அறை களுக்கு வருவாய்த் துறை ஆய் வாளர் மல்லிகா, கிராம நிர்வாக அலுவலர் முத்துராஜ், அரசு  மருத்துவமனை தலைமை மருத் துவர் மோகன பானு ஆகியோர் முன்னிலையில் சீல் வைத்தனர்.