districts

img

உதகை: மலர் நாற்றுகள் நடும் பணி தீவிரம்

உதகை, நவ.22- சென்னையில், கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட் சிக்காக உதகையில் மலர் நாற்றுகள் தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கலைஞர் செம்மொழி பூங்காவில் தோட் டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை சார்பாக ஆண்டுதோறும் கலைஞர் நூற்றாண்டு மலர் கண்காட்சி நடத் தப்பட்டு வருகிறது. இந்த மலர்க்கண்காட் சிக்கு உதகை, கொடைக்கானல்,  ஓசூர் உள் ளிட்ட பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக் கான மலர் நாற்றுக்கள் தொட்டிகளில் தயார் செய்யப்பட்டு, இங்கிருந்து லாரி மூலமாக சென்னைக்கு எடுத்துச் செல்வது  வழக்கம்.  இதன்ஒருபகுதியாக, உதகை அரசு தாவர வியல் பூங்காவில் இதற்காக மலர் தொட்டி கள் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வரு கின்றன. அதில், டெய்சி, மேரிகோல்டு உள் ளிட்ட பல்வேறு மலர் தொட்டிகள் தயாரிக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த தொட்டிகளில் மலர்கள் பூத்தவுடன் சென்னைக்கு கொண்டு செல்லப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல குன்னூர் காட்டேரி பூங்கா வில் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் நாற்று கள் தயார் படுத்தும் பணிகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது. நீலகிரி மாவட்டத்திலி ருந்து இந்த ஆண்டும் சென்னை மலர் கண் காட்சிக்கு லட்சக்கணக்கான மலர் தொட்டி கள் கொண்டு செல்லப்பட உள்ளது. தற் போது இதற்கான பணிகள் நடைபெற்று வரு கிறது.