கோவை, ஜூன் 21- அன்னப்பாறை ஆறானது, தண்ணீர் வரத் தின்றி வறண்டு காணப்படுகிறது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட் டுள்ளது. கோவை மாவட்டத்திலுள்ள ஆனைமலை, இயற்கை எழில் கொஞ்சும் அழகிய வனப் பகுதிகளை கொண்டது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைக்குன்றுகளில் உற்பத்தியா கும் அன்னப்பாறை ஆறு, 20 கிலோ மீட்டர் தூரம் ஊருக்குள் பாய்ந்தோடி உப்பாற்றில் சங்கமிக்கிறது. இந்த ஆற்றில் மழைக்காலங் களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும். இவ் வாறு ஓடும் வெள்ளநீரை தடுத்து விவசாயத் துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்த சேத்து மடை காளியம்மன் கோவில் அருகே தடுப் பணை அமைக்கப்பட்டுள்ளது. அன்னப் பாறை ஆற்றின் இரு கரைகளிலும் ஆயிரக் கணக்கான ஏக்கரில் தென்னை, கோகோ, வாழை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப் பட்டுள்ளன. இதனால், விவசாயத்துக்கு முக் கியத்துவம் வாய்ந்ததாக அந்த ஆறு திகழ் கிறது. மேலும், சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக் கும் பயன்படுகிறது. இந்நிலையில், ஆனைமலை மற்றும் அதன் சுற்றுவட்டார
பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய அளவில் மழை பெய்ய வில்லை. குறிப்பாக கோடை மழைகூட கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக அன்னப் பாறை ஆறு வறண்டு காணப்படுகிறது. ஆற் றின் பகுதியின் ஆங்காங்கே குட்டை போன்று தண்ணீர் தேங்கியுள்ளது. மேலும், தண்ணீர் ஓடிய பகுதி மண்சாலை போலவும், சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமித்தும் காணப் படுகிறது. இது மட்டுமின்றி கரையோரங்க ளில் உள்ள கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளிலும் கூட தண்ணீர் இல்லை. இதன் காரணமாக பாசனத்துக்கு தண்ணீர் பற்றாக் குறை நிலவி வருகிறது. இதனால் விவசாயி கள் கவலை அடைந்து உள்ளனர். மேலும், குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறு கையில், அன்னப்பாறை ஆறு மூலம் ஆனை மலை, சேத்துமடை ஆகிய பகுதிகளில் விவ சாயம் செழிக்கிறது. கடந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. இந்த ஆண்டு கோடை மழையும் ஏமாற்றிவிட்டது. இதனால் வறட்சி ஏற்பட்டு, ஆற்றில் தண்ணீர் இல்லை. குடிக்க கூட தண்ணீர் இல்லாத மோசமான நிலை உரு வாகி விட்டது. அடுத்து மழை பெய்யும்போது தான் ஆற்றில் தண்ணீர் வரும். அதற்கு முன்பு இரு கரைகளிலும் வளர்ந்துள்ள சீமை கரு வேல மரங்களை அகற்ற வேண்டும். அதோடு ஆற்றை தூர்வார பொதுப்பணித்துறை அதி காரிகள் முன்வர வேண்டும், என்றனர்.