சேலம், மார்ச் 27- பாஜக மாநிலத் தலைவர் அண் ணாமலை அரசியல் பேசாமல் அவ தூறு பேசி வருகிறார் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி, சாடி யுள்ளார். சேலம் மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதி களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில், விசிக தலைவரும், நாடாளு மன்ற உறுப்பினருமான தொல்.திரு மாவளவன் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன்பின், செய்தியா ளர்களிடம் அவர் கூறுகையில், தமி ழகத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரு கிறது. இதுபோன்ற குற்றங்களை தடுப்பதற்கு சிறப்பு புலனாய்வுக் குழு அல்லது உளவுத்துறை அமைக் கப்பட வேண்டும். சாதி, மத மோதல் களை தடுத்திடும் வகையிலும் சிறப்பு சைபர் கிரைம் உளவுத்துறை அமைக்க வேண்டும், என்றார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அரசியல் பேசாமல் அவதூறு பேசி வருகிறார். தன்னுடைய பெயரை விளம்பரப் படுத்தி, அனைத்து தொலைக்காட்சி களும் அவரைப் பற்றி பேச வேண் டும் என்ற நோக்கத்தில் அவர் அப் படி பேசி வருகிறார். மேலும் அவ தூறு பேசி வரும் அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய் துள்ளனர், என்றார். தொடர்ந்து அவர் பேசுகையில், நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் தற்போது ஆளுநரிடம் உள்ளது. அந்த தீர்மானத்தை விரைந்து குடி யரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும். குடியரசுத் தலை வர் அதனை கிடப்பில் போடாமல் அதற்கு ஒப்புதல் வழங்கி உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப வேண் டும். மார்ச் 28, 29 ஆகிய தேதி களில் நடைபெறும் அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தில் விசிக தொழிற்சங்க அமைப்பு முழுமையா கப் பங்கேற்கும் எனவும் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.