சென்னை,அக். 30 பி.ஜே.பி மாநில தலைவர் அண்ணா மலை கோவையில் கார் சிலிண்டர் வெடி த்தது குறித்து தவறான கருத்துக்களைக் கூறி புலன் விசாரணையை திசை திருப்ப முயற்சிக்கிறார் என்று தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர்விடுத்துள்ள அறிக்கையில், இது போன்ற நிகழ்வுகள் நடந்த உடன் வழக்கு பதிவு செய்வ தும் விசாரணை நடத்துவதும் உள்ளூர் காவல் துறைதான். எல்லா மாநிலத்தி லும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்படு கிறது. இதுதான் சட்டம். விசாரணையில் பயங்கரவாத தடுப்பு சட்டப்பிரிவு ( யுஏபிஏ) சேர்க்கப்பட்டலோ அல்லது தேசிய புல னாய்வு முகமை சட்டம், 2008ல் குறிப்பி டப்பட்டுள்ள பட்டியலில் உள்ள சட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட் டாலோ தேசிய புலனாய்வு முகமை சட்டப் பிரிவு 6-ன் படி வழக்கு பதிவு செய்யப் பட்ட காவல் நிலைய அதிகாரி, மாநில அரசாங் கத்திற்கு உடனடியாக ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையைப் பெற்றவுடன், மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு விரை வில் தெரியப்படுத்த வேண்டும். அந்த அறிக் கையைப் பெற்றவுடன், ஒன்றிய அரசு, 15 தினங்களுக்குள், வழக்கின் தன்மைக்கு ஏற்ப, தேசிய புலனாய்வு முகமை விசார ணைக்கு ஆணை பிறப்பிக்கும். இதுதான் சட்டம். ஆனால், நடைமுறையில் , ஒன்றிய அரசு , தேசிய புலனாய்வு முகமையிடம் கருத்துரு பெற்று, விசாரணைக்கு ஆணை பிறப்பிக்க சில மாதங்கள் கூட ஆவதுண்டு. அதுவரை அந்த வழக்கின் புலன் விசாரணையை, வழக்கு பதிவு செய்த, காவல் நிலைய, புலனாய்வு அதிகாரியே மேற்கொள்வார்.
தாமதம் இல்லாமல் நடவடிக்கை
கோவையில் நடைபெற்ற கார் சிலிண்டர் வெடித்த வழக்கில், இந்த சட்ட நடைமுறை, எந்த தாமதமுமின்றி முறை யாக பின்பற்றப்பட்டு, மாநில அரசு, ஒன்றிய அரசிற்கு முறையாக அறிக்கையை அனுப்பி, அதன்பிறகு, வழக்கு தேசிய புல னாய்வு முகமை விசாரணைக்கு மாற்றப் பட்டது. மேலும் , சில முக்கியத்துவம் மிக்க வழக்குகளில், ஒன்றிய உள்துறை தாமா கவே முன் வந்து என்ஐஏ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கலாம். ஆனால் இந்த வழக்கில், ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்கும் முன்னரே முதல்வர் கோவை கார் வெடிப்பு நிகழ்வை என்ஐஏ விசாரிக்க பரிந்துரை செய்தார்.
அபத்தமான குற்றச்சாட்டு
இதில் எங்கே தாமதம் வந்தது? இதற்கு முன்னால் நிகழ்ந்த இது போன்ற நிகழ்வு களில் சில மாதங்கள் கழித்துத்துத் கூடவழக்குகள் என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன, அதுவும் சில வழக்கு களில், சில மாநிலங்களில் ஆவணங்கள் பல மாதங்களுக்குப் பின்னரே என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டன. தற்போது திடீ ரென்று வெடிகுண்டு நிகழ்வு கோவையில் நடக்கப் போவதாக புதுடில்லி உள்துறை அமைச்சகம் முன்பாகவே எச்சரித்ததாக புகார் கூறுகிறார். இது அபத்தமானது. ஏனென்றால், அவர் குறிப்பிடு வது, புது டில்லி உள்துறை அமைச்ச கத்தில் இருந்து அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்க ளுக்கும் அனுப்பப்பட்ட பொதுவான சுற்ற றிக்கை ஆகும். இதில் கோவை சம்பவம் பற்றி எந்த இடத்திலும் கூறப்பட வில்லை.அந்த சுற்றறிக்கை மாநில அரசாங்கங்களுக்கு குண்டு வெடிக்கப் போவதாக முன்கூட்டியே எச்சரித்ததா கவும் காவல்துறை அதை அலட்சியப் படுத்தியதாகவும் பொய்யாகப் பழி சுமத்தி ஒரு பொய் பிம்பத்தை எற்படுத்த முயல் கிறார். குறிப்பிட்ட சுற்றறிக்கையில் கோவை மாநகரைப்பற்றி எந்த தகவலும் இல்லை.
முன்னெச்சரிக்கை தகவல் வரவில்லை
18.10.2022 தேதியிட்ட வழக்கமான சுற்ற றிக்கை 21 ஆம் தேதி பெறப்பட்டு உடனே அனைத்து நகரங்களுக்கும், மாவட்ட காவல் அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப் பட்டது. இவர் சொல்வது போல் கோவை யில் இந்த சம்பவம் சில குறிப்பிட்ட நபர்கள் நடத்தப் போகிறார்கள் என்ற தகவல் கிடைத் திருத்தால் தமிழ்நாடு காவல்துறை அந்த நிமிடமே அந்த நபர்களைக் கைதுசெய்து, வீடுகளை சோதனையிட்டு, வெடி பொருட் களை கைப்பற்றி இருக்கும். எனவே இது போன்ற உண்மையில்லாத மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வதந்திகளையும் முன்னாள் கர்நாடக காவல் அதிகாரி பரப்பி தமிழ்நாடு காவல்துறைக்கு களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அந்த அறிக்கையில் டிஜிபி கூறியுள்ளார்.