districts

img

அரசியலுக்கே அருகதையற்ற நபர் அண்ணாமலை

கோவை, ஜன.25-  அரசியல் நாகரீகமோ, மக்கள் தங்களை கவனிக்கிறார்கள் என்கிற  புரிதலோ இல்லாமல், அருவருக் கத்தக்க வார்த்தைகளை பேசிவ ரும் அண்ணாமலை அரசியலுக்கே  அருகதையற்ற நபர் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் விமர்சித்துள்ளார்.  கோவை மாவட்டம் சூலூர் சட்ட  மன்ற தொகுதிக்குட்பட்ட சூலூர்  பேருந்து நிலையப் பணிமனையில் 13.50 லட்சம் ரூபாய் மதிப்பில் ஆழ் துளை கிணறு, பேவர் பிளாக் தரைத் தளம், சூலூர் பேரூராட்சிக்கு உட் பட்ட உடற்பயிற்சி கூடத்தில் 4.45 லட் சம் ரூபாய் மதிப்பீட்டில் மையத்தில்  நவீன பளு தூக்கும் கருவிகள், அப் பநாயக்கன்பட்டி புதூரில் 42 லட்சம்  ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக் கூடம், பட்டணம் பகுதியில் பதி னைந்து புள்ளி 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ரேஷன் கடை, 4.95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆழ் துளை கிணறு மற்றும் குடிநீர் தொட்டி என நாடாளுமன்ற உறுப்பி னர் தொகுதி மேம்பாட்டு நிதியிலி ருந்து ரூபாய் 90 லட்சம் மதிப்பீட்டில்  முடிவுற்ற திட்டப் பணிகளை, மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்  புதனன்று திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித் தார். இதனைத்தொடர்ந்து செய்தி யாளர்களிடம் பி.ஆர்.நடராஜன் எம்பி., பேசுகையில், ஏழை, எளிய  உழைப்பாளி மக்கள் பயன்பெரும் வகையில், நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்தி கோவை மாவட்டத்தில் மட்டும் 43  சமுதாய கூடங்களை திறந்து வைத் துள்ளேன். இரண்டு ஆண்டுகள், ஒன்றிய பாஜக அரசு தொகுதி  மேம்பாட்டு நிதியை நிறுத்தி விட் டது. இவர்கள் உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை நிறுத் திவிட்டு, பிரதமருக்கு விமானம் வாங்கவும், நாடாளுமன்றம் கட்டு வதற்கு என நிதியை ஒதுக்கிக் கொண்டனர். இரண்டு ஆண்டுக ளுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி  கிடைத்திருந்தால் இன்னமும் ஏராளமான திட்டங்களை மக்கள்  பயன்பாட்டிற்காக கொண்டு வந்தி ருக்கலாம் என்றார். இதனைத்தொ டர்ந்து அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கை யில், பொதுமக்களை சந்திக்கும் போதும், அமைச்சர்கள் மற்றும் பத் திரிகையாளர்களை தரக் குறை வாக கெட்ட வார்த்தைகளால் பேசி வருகிறார். பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது மரியாதை குறை வான, நாகூசும் வார்த்தைகளை பயன்படுத்துகிறார். ஒன்றிய அர சின் பிரதிநிதி என்று சொல்லக்கூ டிய ஒரு கட்சியின் தலைவர் ஒரு  மாநில முதல்வருக்கு எதிராக தவ றான வார்த்தைகளை பயன்படுத் துவது ஏற்கமுடியாது. அண்ணா மலை மீது பாஜக தலைமை உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண் டும். அவர் அரசியலுக்கே அருகதை யற்றவர். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை விளைவிக்க வேண் டும் என்ற நோக்கில் பாஜக செயல் படுகின்றது. தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. மேல் மட்ட தலைவர்கள் கூடி அதை சரி செய் வார்கள் என்றார்.  முன்னதாக இந்நிகழ்வுகளில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  கோவை மாவட்டச் செயலாளர் சி.பத் மநாபன், மாவட்ட செயற்குழு உறுப் பினர் யு.கே.சிவஞானம், மாவட்ட குழு உறுப்பினர் கனகராஜ், சூலூர்  ஒன்றியச் செயலாளர் சந்திரன், இரு கூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்  ஸ்டாலின், திமுக சூலூர் ஒன்றியச்  செயலாளர் மன்னவன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.