districts

img

பாஜக சொல்லிக்கொள்ள சாதனைகள் ஏதும் இல்லாதபோது பிரம்மாண்டத்தால் வேதனைகளை மறைக்க முடியுமா அண்ணாமலை?

ஒரு லட்சம் சதுர அடி கணக்கில் சுவர் விளம்பரம், பல லட்சம் ரூபாய் மதிப்பில்  பிளக்ஸ் விளம்பர தட்டிகள்,  ஏறத்தாழ ரூ.50 லட்சம் மதிப் பில் மேடை அமைப்பு, பிரம் மாண்ட கட்-அவுட், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்சாரம், அனைத்து பகுதிகளிலும் வாகனங்களில் தொடர் பிரச் சாரம் என சில கோடி ரூபாய் களை அள்ளி வீசி பல்லடம் அருகே ஞாயிறன்று பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க மாநாட்டை நடத்தி யுள்ளனர். இம்மாநாட்டிற்கு தாமாக  வந்த கட்சியினர் ஒரு சிறு பகு தியினர் இருக்கலாம். மற்ற படி தனியார் பள்ளிகள், தனி யார் பனியன் கம்பெனிகளின் பேருந்துகள், வேன்கள் மூலம் பல பகுதிகளில் இருந் தும் ஆட்களை அழைத்து வந்திருந்தனர். தலைக்கு ரூ. 200, ரூ.300 என காசு கொடுத்து கூட்டத்தைக் கூட்டி வந்திருந்தனர். வந்த வர்களில் கணிசமானவர்கள் திருப்பூர் பின்னலாடை ஏற்று மதி நிறுவனங்களில் தங்கி வேலை செய்யக்கூடிய வெளி மாநிலத்தைச் சேர்ந்த  தொழிலாளர்கள். விடுமுறை  நாளில் உணவும், பணமும்  தருவதாக அழைத்து வந்தி ருந்தனர்.

இப்படித்தான் இம் மாநாட்டை பிரம்மாண்டப்ப டுத்தி இருந்தனர். மழை பெய்யக்கூடிய சூழலில் மேகம் கருத்துவந்த தால் கூட்டத்தில் ஆரம்பத்தி லேயே மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசத் தொடங்கி விட்டார். அவரது பேச்சு ஏறத்தாழ ஒரு மணி நேரம். ஆனால் அதில் தேடித் தேடிப் பார்த்தாலும் பாஜக அரசின் எட்டாண்டு ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகள் எதையும் அவர் பட்டியல் போடவில்லை. மாறாக தமிழகத்தை ஆளும் திமுக அரசுக்கு எதிராக வசை பாடுவதில் மட்டுமே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டார். ஒன்றிய அரசு திட்டங்களை தாங்கள் செய்ததாக மாநில  அரசு சொந்தம் கொண்டாடு வதாக அவர் கூறினார். ஆனால் எந்தெந்த திட்டம் அப்படி  சொந்தம் கொண்டா டப்படுகிறது என்பதை விளக் கிச் சொல்ல ஏனோ அவர் மறந்து விட்டார். வந்திருந்த வெளிமாநி லத்தவர்களுக்கு மொழி புரி யாத நிலையில் பாகிஸ்தான் என சொன்னால் உடனே கூச்சல் எழுப்பும் நிலை இருந்ததைக் காண முடிந் தது. மற்றபடி சொல்லிக் கொள்ள ஏதும் இல்லாமல், பிரம்மாண்டம் மட்டுமே மக் களை ஈர்த்துவிடும் என்று ஒரு  பிம்பத்தை உருவாக்கும் முயற்சியாக இந்த மாநாடு தெரிந்தது.

ஆனால் எட்டாண்டுக ளில் இவர்கள் ஆட்சியில் விலைவாசி வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்தி ருப்பது, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, கொங்கு மண்டலத்தைப் பொறுத்தவரை குறிப்பாக  சிறு, குறு தொழில் துறை  நிறைந்த பகுதியாகும். கோவை இன்ஜினியரிங், திருப்பூர் பின்னலாடை, கிராமப்புற விசைத்தறி தொழில் என எல்லாவற்றி லும் பல நூற்றுக்கணக்கான தொழில் முனைவோர் தொழி லில் நிலைக்க முடியாமல் காணாமல் போய்விட்டனர். விரல்விட்டு எண்ணத்தக்க சிலர் உயர்ந்திருக்கின்றனர். இப்படியாக பட்டியல் போடக்கூடிய வேதனை விப ரம் ஏராளமாக இருக்கிறது. இதற்கெல்லாம் உருப்படி யாக ஒரு பதிலும் சொல்லாத  மாநாடாகவே 8 ஆண்டு தாமரை மாநாடு நடைபெற்று  முடிந்தது. பிரம்மாண்டத் தால் வேதனைகளை மறைக்க முடியுமா திரு. அண் ணாமலை என்று கேட்கின்ற னர் மக்கள். -நாடோடி