districts

img

கால்நடை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம்

பென்னாகரம், ஜூலை 27- தமிழ்நாடு அரசு கால் நடை பராமரிப்பு துறை சார் பில் கால்நடை தடுப்பூசி மற்றும் விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்டம், பென் னாகரம் அருகே உள்ள ஜங்க மையனூர் கிராமத்தில் நடை பெற்றது. மழைக்காலங்களில் ஆட்டு இனங்களுக்கு ஆட் டுக்கொல்லி நோய் பரவும். இதுபோன்ற  நோய்கள் தாக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கையாக பென்னாகரம் கால்நடை  மருத்துவமனை சார்பில் வெள்ளாடு மற்றும் செம்மறி ஆடுகளுக்கான ஆட்டுக்கொல்லி  நோய் தடுப்பூசி போடும் முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கால்நடை உதவி மருத்துவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். இந்த  நிகழ்ச்சியில் முதன்மை நோய் நிகழ்வியல் அலுவலர் முனைவர்  சத்தியநாராயணன், நோய் நிகழ்வியல் அலுவலர் முனைவர் ராஜா ராமன், மண்டல இணை இயக்குனர் மருத்துத் துவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.  இதில், உதவி இயக்குனர்கள் சண்முக சுந்தரம், மணிமாறன், பாப்பாரப்பட்டி கால் நடை உதவி மருத்துவர் சரவணன், தருமபுரி கால்நடை உதவி மருத்துவர்கள் ஜெரோம் சார்லஸ், திருப்பதி, கால்நடை ஆய்வாளர் கள் ஸ்ரீதர், சரவணன், கால்நடை பராமரிப்பு  உதவியாளர்கள் தாமஸ் மற்றும் பரமசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி முகாமில் செங்கனூர் ஊராட்சியை சேர்ந்த செங்கனூர், ஜங்கமையனூர், எர்கொல்ல னூர், சின்னபள்ளத்தூர், பெரியபள்ளத்தூர், ராஜாவூர், மல்லாபுரம், நாகனூர் கிராம விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தி கொண்டு பயனடைந்தனர்.