சேலம், அக்.12- காலியாக உள்ள பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கத்தினர் உண்ணா விரதத்தில் ஈடுபட்டனர். கால்நடை ஆய்வாளர் பயிற் சியை போர்க்கால அடிப்படையில் துவங்கி, கால்நடை பராமரிப்பு துறை யில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ஆறா வது ஊதியக்குழுவில் கால்நடை ஆய்வாளர் நிலை ஒன்று மற்றும் முது நிலை கால்நடை மருத்துவ மேற்பார் வையாளர்களுக்கு வழங்கப்படாத நியாயமான ஊதியத்தை பெற்றிட, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கினை சங்க கோரிக்கையின் வழியாக அமல்படுத்த வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் கள் சங்கத்தினர் சேலம் கோட்டை மைதானத்தில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை தமிழ் நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் சுரேஷ் துவக்கி வைத் தார். சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளர் ஜெயச்சந்திரன், கிருஷ் ணகிரி செயலாளர் பன்னீர்செல்வம், தருமபுரி செயலாளர் அழகிரி, நாமக் கல் செயலாளர் மோகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநிலப் பொருளாளர் ஜி.கதிரவன் நிறைவு ரையாற்றி, போராட்டத்தை நிறைவு செய்து வைத்தார். இதில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமான கால்நடை ஆய்வாளர்கள் பங்கேற்ற னர். கோவை இதேபோன்று, கோவை மாவட் டம், சிவானந்தா காலனியில் நடை பெற்ற உண்ணாவிரதப் போராட்டத் திற்கு, கால்நடை ஆய்வாளர் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலா ளர் பொன்.கருணாநிதி தலைமை ஏற்றார். ஓய்வுபெற்ற கால்நடை ஆய் வாளர் சங்க மாநிலத் தலைவர் ஆர். சின்னசாமி துவக்கி வைத்தார். இதில் சங்கத்தின் கோவை மாவட்டச் செய லாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், இணைச்செயலாளர் ர.ராஜ்குமார், திருப்பூர் செயலாளர் கே.செந்தில் குமார், ஈரோடு செயலாளர் மா.நசீர், நீலகிரி செயலாளர் கிருஷ்ணகுமார், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.ஜெகநாதன், செயலாளர் கே. அருணகிரி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கே.என்.ராம சாமி, வங்கி ஊழியர் சம்மேளன மாவட் டச் செயலாளர் ஆர்.மகேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், அரசு ஊழியர் சங்க மாவட் டச் செயலாளர் செந்தில் குமார் நிறை வுரையாற்றினார்.