districts

img

வாய் நோய் வராமல் தடுக்க 2 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் கால்நடை பராமரிப்பு கூடுதல் தலைமை செயலாளர் தகவல்

கோவை, ஜூலை 6– கால்நடைகளுக்கு வாய் நோய் வரா மல் தடுக்க 2 லட்சம் டோஸ் தடுப்பூசி கள் கோவை மாவட்டம் முழுவதும் கால்நடைகளுக்கு செலுத்தப்பட்டுள்ள தாக கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் தெரிவித்தார்.  கோவை மாவட்டத்தில் புதிதாக பணியில் சேர்ந்த 28 கால்நடை உதவி  மருத்துவர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வகுப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் புதனன்று நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்பு பால் வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பங்கேற்று பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். இதில், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் பெருமாள்சாமி மற்றும் புதிதாக பணி யில் சேர்ந்த கால்நடை உதவி மருத்து வர்கள் கலந்து கொண்டனர். இப்பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்து கூடுதல் தலைமை செயலாளர் தென்காசி எஸ்.ஜவகர் பேசுகையில், தமிழக அரசு துறைகளில் கால்நடை பராமரிப்புத்துறை 130 ஆண்டுகள் பாரம் பரியம் கொண்ட மிகவும் தொன்மை யான துறையாகும். தமிழகத்திலுள்ள கால்நடை வளர்ப்போரின் பொருளா தார நிலையை மேம்படுத்தும் நோக் கில் கால்நடைகள் மற்றும் கோழிக ளுக்கு கால்நடை மருத்துவ சேவை களை இலவசமாக இத்துறை வழங்கி வருகிறது. தமிழக கால்நடை வளர்ப் போரின் வருமானம் 41 சதவிகிதம் கால் நடை பராமரிப்பு சார்ந்து அமைந்துள் ளது. தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களான விலையில்லா வெள்ளா டுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாட்டுக் கோழிகள் வழங்கி கிராமப்புற வாழ்வா தாரத்தை மேம்படுத்த பங்காற்றி வரு கிறது. 

கோவை மாவட்டத்தில் கால்நடைக ளுக்கு வாய் நோய் வராமல் தடுக்கும் பொருட்டு, 2 லட்சத்து 34 ஆயிரத்து 450 டோஸ் தடுப்பூசிகள் மாவட்டம் முழுவ தும் 4 மாத வயதிற்கு மேல் உள்ள அனைத்து மாட்டினம் மற்றும் எருமையி னங்களுக்கு செலுத்தப்பட்டு நோய்  தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளது. 16 லட்சம் கால்நடைக ளுக்கு சிகிச்சைப் பணிகள், 23 லட்சம் குடற்புழு நீக்கப்பணிகள் மற்றும் 15 லட் சம் செயற்கை முறை கருவூட்டல் பணி கள் மேற்கொள்ளப்பட்டு, அதன்மூலம் 51 ஆயிரம் உயர் மரபணு திறன் கொண்ட கன்றுகள் பிறந்துள்ளன. தமிழக கால்நடை பராமரிப்புத் துறையில் தற்போது 3 ஆயிரத்து 30  கால்நடை உதவி மருத்துவர் பணியிடங் கள் உள்ளன. இந்த பணியிடங்களில் 141 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங் கள் பல்வேறு நீதிமன்ற வழக்குகளால் கடந்த பத்தாண்டுகளாக நிரப்பப்படா மல் இருந்த நிலையில், தமிழக முதல் வர் அவர்களின் வழிகாட்டுதழினால் அனைத்து சட்ட சிக்கல்களும் தீர்க்கப் பட்டு, நீதிமன்ற ஆணை பெறப்பட்டு, 1089 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்கள் நிரப்ப, பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட் டத்தில் புதியதாக பணியில் சேர்ந்த 28  கால்நடை உதவி மருத்துவர்கள், இப்ப யிற்சியினை பயன்படுத்தி சிறப்பாக பணியாற்ற வேண்டும், என்றார்.