தருமபுரி, ஏப்.1- சிறப்பு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்ணில் கருப்புதுணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வருவாய் கிராம ஊழியர்களுக்கு இணையான மாதந்திர சிறப்பு பென்சன் ரூ.6750 வழங்கவேண்டும். அரசு துறை யில் உள்ள காலி பணியிடங்களில் தகுதி யுள்ள சத்துணவு அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்தி வரை யறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட துணைத்தலைவர் எலசியப்பன் தலைமை ஏற்றார். மாநில துணைத் தலைவர் இ.கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட செயலாளர் பி.சுப்பிரமணியன், மாவட்ட பொருளாளர் மதலைமுத்து, முன்னாள் மாநில நிர்வாகிகள் கே. துரை, எம்.கணேசன் ஆகியோர் கோரிக் கைகள் குறித்து உரையாற்றினர். இதில், அரசு போக்குவரத்து கழக ஓய்வூதியர் சங்க மாநிலசெயலாளர் கே.குபபுசாமி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சி. காவேரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகி கே.புகேழந்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஓய்வுபெற்றோர் அமைப்பின் மாவட்ட செயலாளர் எம். பெருமாள் ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திரளா னோர் பங்கேற்றனர்.