சேலம், ஏப்.25- காலமுறை ஊதியம் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்தி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி மையங்களை பூட்டி சாவிகளை ஒப்படைத்து போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது. மே மாதம் அங்கன்வாடி பணி யாளர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியர்களாகி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணிக்கொடை ஊழியர்களுக்கு ரூ.10 லட்சம், உதவி யாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும். முறையான பென்சன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர் மற்றும் உதவியாளர் சங்கம் சார் பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டத்துவது என்கிற முடிவின் அடிப்படையில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலை வர் எஸ்.வசந்தகுமாரி தலைமை யில் நடைபெற்ற போராட்டத்தில் 1500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் கள் பங்கேற்றனர். தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு குவிக்கப் பட்டனர். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சரோஜா, மாவட்ட செயலாளர் அ.மனோன் மணி, மாநில செயற்குழு உறுப்பினர் ப.சாவித்திரி உள்ளிட்ட சிஐடியு தலை வர்கள் பங்கேற்றனர்.
கோவை
இதேபோன்று, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் கே.சாந்தி தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடைபெற் றது. இதில், ஏராளமானோர் பங் கேற்றனர். இதனையடுத்து, அங்கன் வாடி ஊழியர்கள் மற்றும் உதவியா ளர்கள் சங்க நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். இதில், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, அங்கன்வாடி சங்க நிர்வாகிகள் கே.சாந்தி, என். சாரதா, என்.சித்ரா, அலமேலு மங்கை உள் ளிட்டோர் பேச்சு வார்த்தையில் பங் கேற்றனர்.
திருப்பூர்
இதேபோல திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அங் கன்வாடி ஊழியர் மற்றும் உதவியா ளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட் டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலை வர் டி.சித்ரா தலைமை ஏற்றார். கோரிக்கைகள் குறித்து மாவட்ட செயலாளர் கே.சித்ரா உரையாற்றி னார். போராட்டத்தை வாழ்த்தி அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.பாலசுப்பிரமணியம், தலைவர் ராணி, சத்துணவு மாவட்ட செயலா ளர் எம்.முருகேசன் ஆகியோர் உரை யாற்றினர். இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.
தருமபுரி
தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்திற்கு அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ஜான்சிராணி தலைமை ஏற்றார். மாநிலச் செயலாளர் எம். லில்லிபுஷ்பம், மாவட்ட செயலா ளர் சி.கவிதா ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். இதில் சிஐ டியு மாநிலச் செயலாளர் சி.நாகரா சன், மாவட்ட செயலாளர் பி.ஜீவா, அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஏ.சேகர், சத்துணவு ஊழியர் சங்க மாநிலச் செயலாளர் பெ.மகேஸ் வரி, உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழு மாவட்ட அமைப் பாளர் சி.காலாவதி ஆகியோர் வாழ்த்தி பேசினர். அங்கன்வாடி ஊழி யர் சங்க மாவட்ட பொருளாளர் என். தெய்வானை நன்றி கூறினார். நாமக்கல் நாமக்கல் ஆட்சியர் அலுவல கம் முன்பு அங்கன்வாடி சங்கத்தி னர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர். இதில் சிஐடியு மாவட்ட செயலாளர் என்.வேலுச்சாமி, தலை வர் எம்.அசோகன், அங்கன்வாடி ஊழியர் சங்கத்தை சேர்ந்த திரளா னோர் கலந்து கொண்டனர்.