சேலம், ஏப்.19- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண் டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழி யர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தி னர் பெருந்திரள் போராட்டத்தில் ஈடு பட்டனர். பணிக்கொடை, ஊழியர்களுக்கு 10 லட்சமும், உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் வழங்க வேண்டும். முறை யான பென்சன் வழங்க வேண்டும். கோடை கால விடுமுறை வழங்க வேண் டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத் தின் சார்பில் மாநிலம் முழுவதும் தர்ணா நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, சேலம் ஆட்சி யர் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்திற்கு, மாவட்ட தலைவர் எஸ்.வசந்தகுமாரி தலைமை ஏற்றார். இதில், சிஐடியு மாநில துணைத்தலை வர் ஆர்.சிங்காரவேல், மாவட்ட செயலா ளர் ஏ.கோவிந்தன், தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.சரோஜா, மாவட்ட செய லாளர் மனோன்மணி உள்ளிட்டோர் உரையாற்றினர். இப்போராட்டத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங் கேற்று கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர்.
நாமக்கல்
நாமக்கல் பூங்கா சாலையில் நடை பெற்ற இயக்கத்திற்கு, மாவட்ட தலை வர் பாண்டிமாதேவி தலைமை ஏற்றார். இதில், சங்கத்தின் மாவட்ட செயலா ளர் ஆர்.முருகேசன், மாநில துணைத் தலைவர் ஜெயக்கொடி, மாவட்ட செய லாளர் பிரேமா, சிஐடியு மாவட்ட செய லாளர் என்.வேலுச்சாமி ஆகியோர் உரையாற்றினர். இதில், ஏராளமா னோர் பங்கேற்றனர்.
ஈரோடு
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட தலைவர் எஸ்.ராதா மணி தலைமை ஏற்றார். இதில், அரசு ஊழியர் சங்க மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன், அரசு ஊழி யர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜய மனோகரன், வருவாய்த்துறை அலுவ லர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநா தன் உள்ளிட்ட சகோதர சங்க நிர்வாகி கள் வாழ்த்தி பேசினர். மாவட்ட செயலா ளர் சாந்தி, மாநில துணை தலைவர் எஸ். மணிமாலை, மாநிலக்குழு உறுப்பினர் பூங்கொடி உள்ளிட்ட பெருந்திரளான அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட் டத்தில் கலந்து கொண்டனர்.