districts

img

காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

அவிநாசி,மார்ச்.31- காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அங்கன்வாடி ஊழியர்  மற்றும் உதவியாளர் சங்கத்தினர் அவிநாசி வட்டாட்சியர் அலு வலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையமாக ஆக்குவதையும், ஐந்து குழந் தைகளுக்கு குறைவாக இருக்கும் மினி மையங்களை பிர தான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண் டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு ஊழி யர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவதைப் போல் அங்கன்வாடி ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தை  அமைப்பின் ஒன்றிய தலைவர்  வளர்மதி தலைமையேற்று நடத்தினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் தனலட்சுமி, வட் டாரச் செயலாளர் இந்திராணி, சிஐடியு விசைத்தறி தொழி லாளர் சம்மேளன மாநிலத் தலைவர் முத்துசாமி, அரசு  ஊழியர் சங்க நிர்வாகி கருப்பன் உள்ளிட்டோர் பேசினர்.  இறுதியாக ஒன்றிய பொருளாளர் நன்றி கூறி ஆர்ப்பாட் டத்தை நிறைவு செய்தார்.

;