திருப்பூர் ஜூன் 18- திருப்பூர் மாநகரில் உள்ள 12 அங்கன்வாடி மையங்களில் மின்வ சதி இல்லாததால் மின் விசிறி, மின் விளக்குகள் இல்லை. எனவே காற் றோட்டம் இல்லாமல் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூருக்கு தொழில் தேடி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளம னோர் வருகின்றனர். அவ்வாறு வரும் தொழிலாளர்கள் தங்கள் 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஊட்டச்சத்து, ஆரம்பக்கல்வி, உடல், அறிவு மற்றும் சமூக மன வளர்ச்சிக்கு அங்கன்வாடி மையங்களையே சார்ந்து இருகின்ற னர். இந்நிலையில் திருப்பூர் மாந கர் கேவிஆர்.நகர், பூச்சக்காடு உட்பட 12 அங்கன்வாடி மையங்க ளில் மின்வசதி இல்லை என புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக திருப்பூர் மாந கர மக்கள் கூறியது: திருப்பூர் மாநக ராட்சி கேவிஆர். நகரில் செயல் பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை நம்பி, அப்பகுதியில் வாழும் தொழிலாளர் குடும்பங்கள் ஏராளமாக உள்ளன. தற்போது வரை 30 பேர் படித்து வரக்கூடிய சூழலில், அந்த அங்கன்வாடி மையத்தில் மின்சார வசதி இல்லா ததால் குழந்தைகளுக்கு மின்வி சிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படாமல் தவித்து வரு கின்றனர். இதேபோல் மாநகர் முழு வதும் 12 அங்கன்வாடி மையங்க ளில் மின்வசதி இல்லாததால், நூற்றுக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எங்களது மூத்த குழந்தையை அங்கன்வாடியில் சேர்த்தபோதும், மின் வசதி இல்லை. அதேபோல் 7 ஆண்டுகள் கழித்து மற்றொரு குழந் தையை அதே அங்கன்வாடி மையத் தில் சேர்த்தபோது தற்போதும் மின்வசதி இல்லை. இந்த காரணங் களால், பெற்றோர் பலர் தங்களது குடி யிருப்பை கடந்து வேறு பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சேர்க் கும் நிலை ஏற்படுகி றது. அனைத்து தரப் புக்குமான நன்மைப யக்கும் வகையில், குழந்தைகளின் ஊட்டச்சத்து உள்ளிட்ட விஷயங் களில் கவனம் செலுத்தும் அங் கன்வாடி மையங்கள்,அடிப்படை வசதிகளிலும் போதிய கவனம் செலுத்த வேண்டும் என்று பெற் றோர் ஒருவர் கூறினார். திருப்பூர் மாநகர ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயலதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:- திருப் பூர் மாநகரில் 12 அங்கன்வாடி மையங்களில் மின்வசதி இல்லை. மின்சாரத்துக்கான வைப்புத் தொகை தலா ரூ. 2800 வீதம், அனைத்து அங்கன்வாடி மையங்க ளுக்கும் ஒருங்கிணைந்த குழந்தை கள் வளர்ச்சி திட்டத்தில் இருந்து நிதி வந்துள்ளது. ஆனால் மின்வசதி ஆன்லைன் முறையில்தான் பதிவு செய்ய முடியும் என்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மின்வாரிய அலுவலகத்திலும் வெவ்வேறு வித மான தகவல்கள் சொல்வதால், நடைமுறை சிக்கல்களால், மின் வசதி ஏற்படுத்த முடியவில்லை. யார் பெயரில் இணையத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும் என்ப தில் குழப்பம் நீடிக்கிறது. மின் வயர்கள் உள்ளிட்ட மற்ற அனைத்து பணிகளும் முடித்து வைத்துள் ளோம். தற்போது குழந்தைகள் அங் கன்வாடி மையங்களுக்கு வரத்தொ டங்கி இருப்பதால், சாப்பிட வைத்த பின், சில குழந்தைகள் தூங்கும். எனவே மின்விசிறி மற்றும் மின் விளக்கு உள்ளிட்டவை தேவை. ஆகவே இது தொடர்பாக விரை வில் 12 அங்கன்வாடி மையங்களுக் கும், மாநகராட்சி மற்றும் மின்வாரி யத்திடம் பேசி மின்வசதி பிரச்சி னையை தீர்க்க நடவடிக்கை எடுக் கப்படும் என்றார்.