districts

img

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, மார்ச் 28- அங்கன்வாடி ஊழியர்கள் ஈஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள ஐசிடிஎஸ் அலுவலகம் முன்பு செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  10 குழந்தைகளுக்கு குறைவாக இருக்கும் மையங்களை மினி மையங்களாகவும், 5க்கும் குறைவாக இருக்கும் மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். அங்கன்வாடி பணியாளர்களுக்கு 3 மையங்கள் கூடுதல் பொறுப்பு அளிக்க கூடாது, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பதைப் போல அங்கன்வாடி மையங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். சமையல் எரிவாயுவிற்கு பில்படி தொகை வழங்க வேண்டும். அதேபோல மின் கட்டணமும் அரசே செலுத்த வேண்டும். மினி மைய ஊழியர்களுக்கும், 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கும் நிபந்தனையின்றி பதவி உயர்வு வழங்க வேண்டும். அரசு ஊழியர்களைப் போல அங்கன்வாடி ஊழியர்களுக்கும் ஒரு வருடம் மகப்பேறு விடுப்பு அளிக்க வேண்டும். ஜிபிஎப் லோன் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி 15 வட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. இதில் மாநில துணை தலைவர் எஸ்.மணிமாலை தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.இராதாமணி, செயலாளர் எஸ்.சாந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றினர். ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ச.விஜயமனோகரன், மாநில துணை பொது செயலாளர் மு.சீனிவாசன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.