districts

img

அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், மே 10- அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7850 நிர்ணயித்து, குடும்ப ஓய்வூதியம் வழங்க வலியு றுத்தி திருப்பூரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத் தின் ஒன்றியத் தலைவர் ஆர்.சரஸ் வதி தலைமையில் திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் பாக திங்களன்று இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இதில் மாவட்டத் தலைவர் கோ.முத்தமிழ்ராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசி னார். தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத் தலைவர் கே.சண்முகம், சத்துணவு ஓய்வூதி யர் சங்க மாவட்டப் பொருளாளர் எஸ்.சுசீலா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் எம்.பாக்கியம் நிறைவுரை ஆற்றினார். இலவச மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்க வேண்டும். ஓய்வூதி யர்களுக்கு இலவச பஸ் பாஸ்  வழங்க வேண்டும். ஈமக்கிரியை தொகை ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வர்கள் முழக்கம் எழுப்பினர். நிறை வாக ஒன்றியப் பொருளாளர் எம்.பி.நவமணி நன்றி கூறினார்.