திருப்பூர், ஜன. 21 - தாராபுரம் என்.என்.பேட்டை வீதி அங்கன்வாடி பள்ளி சுகாதார சீர்கேட்டு டன், குழந்தைகளுக்கு ஆபத்தான நிலையில் பராமரிப்பு இல்லாமல் உள் ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் என். என்.பேட்டை வீதியில் உள்ள வளையக் கார பள்ளி அருகில் கடந்த 20 வருடமாக அங்கன்வாடி மையம் செயல்பட்டு வரு கிறது. இங்கு மூன்று மற்றும் நான்கு வயது குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். இந்த மையம் தற்போது பராமரிப்பு இல்லாமல் பெரும் சுகாதார சீர்கேட்டுக்கு நடுவில் இயங்கி வருகி றது. கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில், தண்ணீர் வசதி இல்லாமல் உள்ளது. எனவே இங்கு வரும் குழந் தைகள் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்க வேண்டிய சுகாதாரமற்ற நிலை உள்ளது. அதே இடத்திலேயே குழந்தை கள் விளையாடுவது போன்ற செயல் கள் தினந்தோறும் நடைபெற்று வரு கின்றன. இதனால் குழந்தைகள் அடிக் கடி தொற்று நோயால் பாதிக்கப்படு கின்றனர். மேலும் இந்த அங்கன்வாடி மையத்திற்கு அருகிலேயே தடுப்பு எதுவும் இல்லாமல் குழந்தைகள் எளி தில் ஏறக்கூடிய வகையில் பயன்படுத் தப்படாத பாழுங்கிணறு ஒன்றும் உள் ளது. கிணற்றுக்கு மேலே கம்பி வலை அமைக்கப்பட்டிருந்தாலும் அது மிகப் பெரும் இடைவெளியுடன் இருப்பதால் குழந்தைகள் உயிருக்கு ஆபத்து ஏற்ப டும் சூழல் உள்ளது. இரண்டு வய துக்கு மேல் நான்கு வயது வரை யுள்ள 30 குழந்தைகள் வரை தினமும் வந்து தங்கும் இந்த அங்கன்வாடி மையத்தை புனரமைத்து, கழிப்பி டத்தை தண்ணீர் வசதியுடன் பராமரித்து, கிணற்றைச் சுற்றிலும் தடுப்பு ஏற்படுத் திட வேண்டும். மேலும் இடிந்து விழும் நிலையில் சுவர் அருகிலேயே உள்ளது. அதையும் பராமரித்து குழந்தைகள் பாதுகாப்புக்கு உடனடியாக நடவ டிக்கை எடுக்க வேண்டும். முழுமையாக புனரமைத்து பாதுகாப்பை உத்தரவா தப்படுத்தும் வரை, இங்குள்ள குழந் தைகளை அருகாமையில் மாற்று இடத் தில் தங்க வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.