கோவை, நவ.8- கோவை மாநகராட்சியின் குப்பை சேகரிக்கும் முறை களை அந்தமான் தலைநகரின் நகராட்சி சபை பிளேயர் குழு வினர் செவ்வாயன்று ஆய்வு மேற்கொண்டனர். அந்தமான் தலைநகரின் நகராட்சி சபை பிளேயர் துறை முகத்தின் தலைவர் கவிதா உதயகுமார் தலைமையில் நகர மன்ற உறுப்பினர்கள் 14 பேர் அடங்கிய குழு கோவைக்கு வருகை தந்துள்ளனர். இக்குழு கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் திடக்கழிவு மேலாண்மை மற்றும் வீடு களில் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய வந்துள்ளனர். இதன்ஒரு பகுதியாக கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலத்திற்குட்பட்ட 26 ஆவது வார்டு, பீளமேடு பகுதியில் குப்பைமாற்றின் நிலையத்தில் தரம் பிரித்து சேகரமாகும் குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங் கிற்கு கொண்டு செல்லும் பணிகள் நடைபெறுவதை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த் குமார் முன்னிலையில் அக்குழுவினர் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டனர். அத னைத்தொடர்ந்து, 27 ஆவது வார்டுக்குட்பட்ட நவ இந்தியா, டிவிஎஸ் நகரில் வீடுகளில் இருந்து பெறப்படும் குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளையும் நேரில் பார்வையிட்டு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் பொழுது கோவை மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா, வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன் உட்பட மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.