ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட் டம், நஞ்சை கொளாநல்லி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் கடந்த ஜூலை 12 ஆம் தேதி காலை 11 மணிக்கு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட் டத்திற்கான அழைப்பு வாட்ஸ் அப் மூலம் தகவல் கிடைத்தது. முறையாக சட்டம் வழங்கியிருக்கும் குறைந்தபட்ச நடை முறை 7 நாட்களுக்கு முன் அறிவிப்பு தண் டோரா போட வேண்டும். நோட்டீஸ் கொடுத்து மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். 100க்கு இவ்வளவு நபர்கள் பங்கெடுக்க வேண்டும் என்ற நடைமுறை களை பின்பற்ற வேண்டும். பங்கேற்பு குறை வாக இருந்தால் மீண்டும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். வழக்கமாக வருடத்தில் 4 முறை கட்டாயம் கிராம சபை நடத்த வேண்டும். ஊராட்சி மன்ற தலைவர் எப்போது வேண்டுமானாலும் கிராம சபை கூட்டம் நடத்தலாம். இது ஊராட்சி மன்ற தலைவருக்கு சட்டம் வழங்கிய அதி காரம்.
ஆனால், இங்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் நாளுக்கு முதல் நாள் மாலை 4 மணிக்கு நாளை கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து தகவல் வந்தது என்று தெரிவித்தனர். அதன்படி நடந்த கூட்டத்தில் வறுமைக்கோடு பட்டியல் தயாரிப்பு குறித்த பொருள் இருந்தது. ஆனால், அதற்கான விவாதம் இல்லை.இவ்வாறு தான் பெரும்பாலான கிராம சபை கூட்டம் நிகழ்வுகள் உள்ளன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடு முடி - மொடக்குறிச்சி ஒன்றிய செயலா ளர் கே.பி.கனகவேல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மாவட்ட நிர்வாகத் திற்கு அனுப்பிய மனுவில், கூட்டத்திற்கு வந்த உடனே கையெழுத்து வாங்கி கணக்கு காட்டுவது; 100 நாள் வேலை தலத்தில் கையெழுத்து வாங்குவது, மக் கள் கூடும் இடத்தில் நின்று கையெழுத்து பெறுவது என்று தான் நடைபெறுகிறது. பொதுமக்கள் கோரிக்கைகள், குறை கள், தேவைகள் தீர்மானங்களாக மாறுவது கிடையாது. மாவட்ட ஆட்சியர் அலுவல கம், வட்டார வளர்ச்சி அலுவலகத்திலி ருந்து கூறப்படுவதுதான் கூட்ட பொருளாக வைக்கப்படுகின்றன. மற்ற சாமானிய மக்க ளின் கோரிக்கை பொருளாவது இல்லை. அப்படியே மாறினாலும் அடுத்த கட்ட நட வடிக்கை இல்லாமல், தீர்மானம் நோட்டில் தான் இருக்கும். மாவட்ட ஆட்சியர் அலு வலகத்திற்கு அனுப்பி விட்டோம் என்ற பதில் மட்டுமே மிஞ்சும்.
கடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி யின் வரவு - செலவு குறித்து ஊராட்சி அலு வலகத்தில் 7 நாட்களுக்கு (பிளக்ஸ்) முன் வைக்க வேண்டும் என்ற விதிப்படி எதுவும் வைக்கப்படவில்லை. கூட்டம் தொடங்கும் போது புகைப்படம் எடுத்து சென்று விட்ட னர். மக்கள் விவாதம் செய்ய வழியில்லை. அரசு என்ன தான் பயிற்சி கொடுத்தாலும் தயார் ஆகாத தலைவர்கள், சில ஊராட் சிகள் ஊராட்சி செயலாளர் கைபிடியில், சில ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் பிடியில் என்று உள்ளது. கிராம சபை கூட்டங்களை மக்களின் திருவிழா வாக நடத்த முயற்சி எடுக்க வேண்டும். ஆனால், போதிய விழிப்புணர்வு ஏற்படுத் தாமல், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கிராம சபை கூட்டம் நடத்த தக வல் என்ற அடிப்படையில் கிராம சபைகள் சம்பிரதாயமாகவே நடத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்ட ஆட்சியர் இப் புகாரை ஏற்று நடைபெற்ற கிராம சபை கூட்டம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என சிபிஎம் ஒன்றிய செயலாளர் கே.பி.கனகவேல் கேட்டுக் கொண்டுள்ளார்.
-சக்திவேல், ஈரோடு.