districts

img

வாழையில் கிழங்கு கூன் வண்டு தாக்குதலும், ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகளும்

கிழங்குக் கூன் வண்டானது தமிழ்நாடு கேரளா, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், வட கிழக்கு மாநில பிரதேசம் ஆகிய இடங்களி லும், தமிழகத்தில் கோவை, திண்டுக்கல், கன்னி யாகுமரி, மதுரை, திருநெல்வேலி, கரூர், ஈரோடு, தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களி லும், அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தி வரு கின்றது.

கூன் வண்டு தாக்குதலின் அறிகுறிகள்

கிழங்கு கூன்வண்டின் இளம் பருவ புழுக் கள் கிழங்கின் மேற்பரப்பில் முட்டை இடுகி றது. முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் கிழங்கினை குடைந்து தின்று வலைபின்னல் போன்று ஒன்றோடொன்று தொடர்புடைய துளைகளை ஏற்படுத்திக் கொள்கின்றன. தாக்கப்பட்ட கிழங்குகளில் இத்துளைகள் காணப்படுவதால் வாழை மரமும் வலுவிழந்து  விடும். கூன் வண்டு தாக்கத்தின் ஆரம்பகட்டத் தில் பசுமையான மேல் இலைகளில் மஞ்சள் நிறமுடைய கோடுகள் காணப்படும். மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். தாக்கப்பட்ட கிழங்கில், வண்டுகள் குடைந்து சென்ற பகுதிகள் அதிகமாகக் காணப்படும். மரம் முற்றிலும் வலுவிழந்து அடிப்பகுதி பருத்தும் நுனிப் பகுதி நன்கு மெலிந்தும் காணப்படும். பூக்கும்  அல்லது காய்பிடிக்கும் தருணத்தில், தாக்கு தல் ஏற்படின், அது குலை உருவாதலை முற்றி லும் பாதித்து விடும்.

கூன் வண்டினால் ஏற்படும் மகசூல் இழப்பு

கன்று நடப்பட்டதில் இருந்து அறுவடை வரை அனைத்து நிலைகளிலும் இக்கூன் வண்டு தாக்குகிறது. எந்த வயதுடைய வாழையை எவ் வளவு தூரம் வண்டுகள் தாக்குகின்றன என்ப தைப் பொருத்து அதிகபட்சமாக 85 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. பூவன், நெய்பூ வன், சிறுமலை, விருப்பாக்ஷி, நேந்திரன், கற்பூர வள்ளி, ரொபஸ்டா, செவ்வாழை போன்ற அனைத்து இரகங்களையும் இவ்வண்டு தாக்குகிறது.

வண்டு பரவும் முறை

பெண் வண்டுகள், கிழங்கின் மேற்பரப்பில் தனித்தனியாக முட்டைகளை இடுகின்றன. ஒரு பெண் வண்டு தன் வாழ்நாளில் சுமால் 36 முதல் 53 முட்டைகளை இடுகிறது. அதாவது வாரத்திற்கு 3 முட்டைகள் என்ற விகிதத்தில் 7  முதல் 6 வாரங்களுக்கு இடுகிறது. பின்பு அடுத்து ஒரு வாரத்தில் கூட்டுப்புழு பரு வத்தை அடைகிறது. பெரும்பாலும் கிழங்கின் மேற்பரப்பிலேயே கூட்டுப்புழு உருவாகிறது. கூட்டுப்புழுவிலிருந்து வெளிவரும் வண்டு சிதோஷ்ண நிலை மற்றும் ஈரப்பதத்தைப் பொருத்து 115 நாட்கள் வரை வாழும்.

ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு முறைகள்

ஒருங்கிணைந்த முறையில் இக்கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது அவசியம். * கிழங்கு கூன் வண்டு, கிழங்குகளின் மூலம் பரவிவதால், தரமான கிழங்கு அல்லது கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். * விதைக் கன்றுகளில் வேரை நீக்கி, மேற்புறம் சீவிவிட்டு, பின்பு நடவேண்டும். வண்டுகள் மற்ற மரங்களுக்குப் பரவுவதைத் தடுக்க, களைகளையும், காய்ந்த சறுகுகளை யும் நீக்கி, தோட்டத்தை சுத்தமாக வைத்தி ருத்தல் அவசியம். *அறுவடை முடிந்தவுடன், தரைமட்டம் வரை வாழைமரத்தை வெட்டிவிட வேண்டும். வெட்டிய மரத்தின் மேற்பரப்பில், கார்பரில் மருந்து கரைசலை 1 லிட்டர் நீரில் 2 கிராம் மருந்து என்ற அளவில் கலந்து இடுவதன் மூலம், வண்டுகள் தண்டிலும் கிழங்கிலும் முட்டையிடுவதை தவிர்க்கலாம். * வாழைக்கிழங்கை நடவு செய்வதற்கு முன்னால், கன்றுகளை ட்ரை அஸோபாஸ் அல்லது மானோகுரோடோபாஸ் கரைசலில்  (1 லிட்டர் நீரில் 14 மி.லி மானோகுரோடோபாஸ் மருந்து) நனைத்து நடவேண்டும். அல்லது நட வுக்கு முன் குழிக்கு 25 கிராம் என்ற அளவில் கார்போஃபியூரான் 3 சத மருந்தை குழிகளில் இட்டுப் பின் நடவு செய்ய வேண்டும். * அறுவடை செய்யப்பட்ட மரங்களின் தண்டுப்பகுதியை 30 செ. மீ நீளத்திற்கு வெட்டி, இரண்டாகப் பிளந்து, பிளக்கப்பட்ட பகுதி தரையை நோக்கி இருக்குமாறு ஒரு ஏக்கருக்கு  40 என்ற அளவில் வைக்க வேண்டும். வெட் டிய பகுதியிலிருந்து வெளிவரும் வேதி பொருட் கள் காற்றில் பரவுவதால் மற்ற இடங்களில் உள்ள கூன் வண்டுகள், தண்டுப்பொறிகளை நோக்கிக் கவரப்படுகிறது. பின்பு கவரப்பட்ட வண்டுகளை சேகரித்து அழித்து விடுவது மிக சுலபமான முறையாகும். இதே போன்று, அறுவடை செய்யப்பட்ட மரத்திலிருந்து கிழங் குகளையும் தோண்டி எடுத்து, நான்கு துண்டு களாக்கி வெட்டப்பட்ட பரப்பு தரையை நோக்கி இருக்குமாறு வைத்தும், வண்டுக ளைக் கவர்ந்து அழிக்கலாம். காஸ்மோலியூல் என்ற கிழங்கு கூன் வண்டு  இனக்கவர்ச்சிப் பொறியை ஒரு ஹெக்டருக்கு 5  என்ற அளவில் வைப்பதன் மூலமும், வண்டு களை கவர்ந்து அழித்து விடலாம். மாதத்திற்கு ஒருமுறை இனக்கவர்ச்சிப் பொறியை மாற்ற வேண்டும். கூன் வண்டுகளைக் கவர்ந்து அழிக்க நீள வாக்கில் வெட்டப்பட்ட தண்டுப்பொறி, பவே ரியா பேசியானா (Beaveria bassiana) என்ற  திரவ வடிவ பூஞ்சாணத்தை (1X10° CFU / ML) (ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி மருந்தினை கலக்க வும்) பொறி ஒன்றிற்கு, 10 மி. லி என்ற அள வில் பொறியின் உள்பாகத்தில் தடவி விடு வதன் மூலம், கூன் வண்டுகளை மிக எளிதில் அழிக்கலாம். ஆகவே, மேற்குறிப்பிட்டுள்ள ஒருங்கி ணைந்த பயிர்பாதுகாப்பு முறையை கடை பிடிப்பதன் மூலம், கூன் வண்டுகள் நடமாட் டத்தை அறிவதுடன் இக்கூன்வண்டுகளை எளிய முறையில் கட்டுப்படுத்தலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இக்கூன்வண்டுகளின் சேதா ரத்தை கட்டுப்படுத்தி வாழை விவசாயிகள் அதிக லாபம் பெற முடியும்.

அ.சஞ்சீவி குமார், கி.மருதுபாண்டி, சா.லோகேஷ், ம.உமாநாத், ஆ.பவ்வியா மற்றும் வ.அம்சகவுரி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - கோவை