திருப்பூர், ஜூலை 15- திருப்பூர் அரசு கல்லூரிகளில் ஆள் சேர்க்க அத்துமீறி அராஜக முயற்சியில் பாரதிய ஜனதா கட்சியினர் ஈடுபட்டனர். அவர்களிடம் மாணவிகள் நோட்டீஸ் வாங்க மறுத்ததுடன், அவர்களை எதிர்த்துப் பேசி புறக்கணித்துச் சென்றனர். இதனால் அவமானப்பட்டு அவர் கள் திரும்பும் நிலை ஏற்பட்டது. பல்லடம் அருகே பாஜக தலைவர் அண் ணாமலை பங்கேற்கும் கூட்டம் 17ஆம் தேதி நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியையொட்டி மாவட்டம் முழுவதும் பாஜகவினர் லட்சக் கணக்கில் விளம்பரத்திற்காக செலவு செய்து தட்டிகள் வைத்துள்ளனர். அத்துடன் கல்லூரி மாணவர்களையும் இந்த கூட்டத்துக்கு வர வைப்பதற்கு என வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தனர். திருப்பூர் எல்ஆர்ஜி அரசுக் கல்லூரி மற் றும் சிக்கண்ணா அரசு கல்லூரியில் “செல்ஃபி வித் அண்ணா” போட்டிக்கு உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெறும் என சமூக ஊடகங்களில் பாஜகவினர் விளம்பரம் செய் திருந்தனர். அரசு கல்லூரி வளாகத்தில் அரசியல் கட்சி நிகழ்ச்சியா என்ற கேள்வியுடன் எல்ஆர்ஜி மற் றும் சிக்கண்ணா கல்லூரி முதல்வர்களை ஊடகத்தினர் தொடர்பு கொண்டனர். அத்த கைய நிகழ்ச்சி நடத்துவதாக யாரும் அணுக வில்லை, யாருக்கும் அனுமதி எதுவும் தர வில்லை என்றும் கல்லூரி தரப்பில் தெரி விக்கப்பட்டது. எல்ஆர்ஜி மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் மெய்.இரெ.எழிலி, சிக்கண்ணா அரசு கல்லூரி முதல்வர் முனைவர் வ.கிருஷ் ணன் இருவரும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், கல்லூரி கல்வி இணை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு கடிதம் எழுதி அனுப்பினர்.
இந்த நிகழ்ச்சி குறித்து பாஜகவினரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, கல்லூரிக் குள் நடத்தவில்லை, கல்லூரிக்கு வெளியே நடத்துகிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் சமூக ஊடகத்தில் கல்லூரிக்குள் நடத்துவ தாக தகவல் பரப்பியது பற்றி கேட்டபோது பதில் கூறாமல் மழுப்பிவிட்டனர். இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்ப கல் பாஜக நிர்வாகிகள் சிலருடன், மகளிர் அணியைச் சேர்ந்த பெண்கள் சிலர் கல்லூரி நுழைவாயில் அருகில் டேபிள் அமைத்து, அண்ணாமலை உருவ கட் அவுட் ஒன்றையும் வைத்து நின்று கொண்டிருந்தனர். எனினும் பிரதான வாயிலை காவல் துறையினர் ஆலோ சனையின்பேரில் கல்லூரி நிர்வாகத்தினர் பூட்டிவிட்டனர். வகுப்பு முடிந்து வெளியே றிய மாணவிகளை பக்கவாட்டு வாசல் வழி யாக வெளியே அனுப்பினர். உடனே பாஜக வின் மாவட்டச் செயலாளர் செந்தில்வேல் உள்ளிட்ட சிலர் அத்துமீறி கல்லூரிக்குள் நுழைந்து சென்று அங்கிருந்த பேராசிரியர் களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அங்கு வந்து அவர் களை வெளியே செல்லும்படி கேட்டுக் கொண் டனர். பின்னர் காவல் துறையினர் கேட்டுக் கொண்டபடி பிரதான நுழைவாயில் திறக்கப் பட்டது. அதன் பிறகு கல்லூரியை விட்டு வெளியே வந்த மாணவிகளிடம் பாஜகவினர் துண்டு பிர சுரங்களை வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்ட னர். அவர்களைப் பார்த்து பல மாணவிகள் விலகிச் சென்றனர்.
வலுக்கட்டாயமாக அவர் களிடம் சென்று பாஜக பெண்கள் நோட்டீஸ் கொடுத்தனர். அப்போது சில மாணவிகள் தேர்வு உள்ள சமயத்தில் தங்களுக்கு இது போன்ற இடையூறுகளை எதற்காக ஏற்படுத் துகிறீர்கள், தங்களால் வெளியே வர முடி யாத சூழலுக்கு பாஜகவினர் தங்களை உள் ளாக்குவதாக குற்றம் சாட்டினர். சில மாணவி கள் எதிர்த்து நின்று பாஜகவினருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் பாஜகவினர் திணறிய நிலையில் காவல் துறையினர் அவர்களை விலக்கி விட்டனர். அத்துடன் கல்லூரிக்கு முன்பாக இது போன்ற பிரச்சார நிகழ்ச்சி நடத்த போலீசாரி டம் அனுமதி பெறாததால் கலைந்து போகும் படி காவல் துறையினர் எச்சரித்தனர். இதைய டுத்து பாஜகவினர் அங்கிருந்து வெளியேறி னர். அதன் பிறகு அருகாமையில் இருந்த கடைகளில் நின்று கொண்டிருந்த மாணவி களிடம் பாஜகவினர் வலுக்கட்டாயமாகச் சென்று நோட்டீஸ்களைத் திணித்தனர். எனி னும் மாணவிகள் அதைப் பெறாமல் விலகிச் சென்றனர். கட்டாயப்படுத்திய நிலையில் சிலர் வேண்டாவெறுப்பாக நோட்டீஸை பெற்றுச் சென்று கீழே போட்டுவிட்டுச் சென்றனர். கல்லூரி வளாகத்தில் தனிப்பட்ட அரசி யல் கட்சிகளின் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்ற விதிமுறை இருந்தும் வெட்கங் கெட்ட முறையில் பாஜகவினர் மேற்கொண்ட இந்த இழி முயற்சிக்கு மாணவிகள் புறக் கணிப்பு செய்தது சரியான பதிலடியாக இருந் தது.