districts

img

உடுமலை வனப்பகுதியில் நெகிழி அகற்றும் பணி

உடுமலை, மே 20 - உலக சுற்றுச்சூழல் தினம் ஜூன் 5 ஆம் தேதி வருவதை  கொண்டாடும் விதமாக ஆனைமலை புலிகள் காப்பகம், திருப் பூர் வனக்கோட்டத்தில்,  நெகிழிகள் அகற்றுதல் மற்றும் பல் வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மே 13ஆம் தேதி தொடங்கி  28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திருப்பூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் மற்றும்  உதவி இயக்குநர் க.கணேஷ் ராம் தலைமையில் சனி யன்று உடுமலைப்பேட்டை வனச்சரகம், சின்னார் பகுதியில்  நெகிழிகள் அகற்றும் பணி மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து அமராவதி வனச்சரகம், கரட்டுப்பகுதி மலைவாழ்  மக்கள் குடியிருப்பில் சூழல் மேம்பாட்டுக் குழு உறுப்பினர்க ளுடன் இணைந்து வனத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட் டது. பின்னர் அமராவதி முதலைப் பண்ணையில் சுற்றுலா  பயணிகளுக்கு, சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்து வம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதேபோல் கொழுமம் வனச்சரகம், குதிரையாறு அணை பகுதியில் சனி யன்று நெகிழி அகற்றும் பணி நடைபெற்றது. மேலும், வந்தரவு  வனச்சரகம், நாட்டாமைப்பட்டி கிராமத்தில் வனத்தீயினால் உண்டாகும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.