பொள்ளாச்சி, ஜூன் 24- ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட் பட்ட ஆழியார் வனச்சோதனைச்சாவடியில் 318.50 கிலோ நெகிழிப்பொருட்கள் சுற்றுலா பயணிகளிடமிருந்து வனத்துறையினர் கைப் பற்றினர். கோவை மாவட்டம், ஆனைமலை புலி கள் காப்பகத்துக்குட்பட்ட ஆழியாறு வனச் சோதனைச்சாவடி அமைந்துள்ளது. ஆழி யாறு அணை மற்றும் வால்பாறை உள்ளிட்ட வனப்பகுதிகளை சுற்றிப்பார்க்க நாள்தோ றும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணி கள் வந்து செல்கின்றனர். வனப்பகுதிக்குள் செல்ல ஆழியாறு சோதனைச் சாவடியை கடந்து செல்ல வேண்டும். இந்நிலையில், ஆழியாறு வனச்சோதனைச்சாவடிகளில் வனத்தையும், வன உயிரினங்களையும் பாதுகாக்கும் வகையில், நெகிழிப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள், மதுபாட்டில் கள், சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு செல்லாதவாறு வனத்துறையினர் கண்கா ணித்து வருகின்றனர். இதனடிப்படையில் கடந்த மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 22 ஆம் தேதி வரையில் சுற்றுலா பயணிகளிடமி ருந்து, 318.50 கிலோ எளிதில் மக்காத பிளாஸ் டிக் பொருட்கள் வனத்துறையினரால் பறி முதல் செய்யப்பட்டது. மேலும், ஆழியாறு வனப்பகுதிக்குள் 275 காலி மதுபாட்டில்கள் சேகரிக்கப்பட்டது. மேலும் இரண்டு பேரிட மிருந்து தடைசெய்யப்பட்ட கஞ்சா பறி முதல் செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைக் காக ஆழியார் காவல் நிலையத்தில் ஒப்ப டைக்கப்பட்டனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகை யில், வனத்தை, வன உயிரினங்கள் மற்றும் வால்பாறையின் சுற்றுச்சூழலையும் பாது காக்க வேண்டும் என்கிற அக்கறையோடு சுற்றுலா பயணிகள் நெகிழிகளை தவிர்க்க வேண்டும் என்றனர்.