கோவை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அடர்ந்த வனம் சூழ்ந்த பகுதியில் அமைந்துள்ளது மேட்டுப்பாளையம். புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருதுகள், கழுதைப்புலி, மான் என பல்வகை காட்டு யிர்கள் வாழும் இவ்வனத்தில் யானை களின் எண்ணிக்கை அதிகம். குறிப்பாக மேட்டுப்பாளையத்தில் உள்ள கல்லார் என்னும் பகுதியில் ஆண்டு முழுவதுமே யானைக் கூட்டங்களின் நடமாட்டத்தை காணலாம். மலைக்காட்டை ஒட்டியுள்ள கல்லார் பகுதியில் யானைகளின் ஊடுரு வல் மிக அதிகம் என்பதால் இப்பகுதி யில் விவசாயம் செய்வதே மிக பெரிய சவா லாகும். காட்டு யானைகளின் படையெடுப் பால் இங்கு பலரும் விவசாய பணியி னையே கைவிட்டு வரும் நிலையில், கடந்த இருபது ஆண்டுகளாக இங்குள்ள ஒரு தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவ சாயம் மேற்கொண்டு வருகின்றனர் ராதாம்மாள்-அப்பு தம்பதியினர். காட்டை ஒட்டியுள்ள தங்களது தோட் டத்து சாலையில் தங்கியபடி வாழை, தென்னை போன்றவற்றை வளர்த்து பரா மரித்து வரும் இவர்கள் தினசரி எதிர்கொள் ளும் ஆபத்துகள் ஏராளம். இதில் ராதாம்மா ளின் எழுபது வயதுடைய கணவர் அப்பு வுக்கு ஏற்பட்ட இருதய கோளாறு மற்றும் அறுவை சிகிச்சை காரணமாக உடல்நலக் குறைவால் வீட்டினுள் முடங்கிவிட, மனம் தளராத 65 வயது ராதாம்மாள் வீட்டு வேலை மட்டுமின்றி விவசாய பணிகளையும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனித்தே செய்து தனது கணவரின் மருத் துவ செலவு உள்ளிட்ட குடும்ப செலவு களை சமாளித்து வருகிறார்.
குரலுக்கு கட்டுப்படும் யானைகள்
குறிப்பாக, இரவானால் அருகில் உள்ள காட்டை விட்டு வெளியேறி தனது தோட் டத்தை நோக்கி வரும் யானைகளை தன்னந் தனியே எதிர்க்கொண்டு விரட்டி வருகிறார். வீட்டு பராமரிப்பு பணிகள், அடுத்ததாக தோட்டத்தில் விவசாய வேலைகள், தான் வளர்க்கும் ஆடு, கோழி, கிளி, நாய் போன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு உணவளித்து பராமரிப்பு என பகல் முழுவதும் பரபரப்பு டன் இயங்கும் ராதாம்மாள் பொழுது சாய்ந்து இருள் சூழ துவங்கியதும் வீட்டில் இருந்து கைகளில் டார்ச் லைட்டுடன் கிளம்பி விடுகி றார். தோட்டத்தை ஒட்டியுள்ள உயரமான மரத்தின் மீது கட்டப்பட்டுள்ள பரண் மீதே றும் மூதாட்டி அங்கிருந்தபடி வன எல்லை களையும் தோட்டத்தையும் கண்காணிக் கின்றார். பரண் மீது தனியே படுத்தபடி சற்றே கண்யர்ந்தாலும் யானைகளின் வருகை யினையும், அதனால் ஏற்படும் சிறு சப் தம் மற்றும் அசைவுகளையும் உணர்ந்து கொள்ளும் அவர், யானை உள்ள இடத்தை தெரிந்து கொண்டு உடனடியாக பரணில் இருந்து ஏணி வழியே கீழே இறங்கி தனது வளர்ப்பு நாய்களுடன் கடும் இருளில் டார்ச் லைட் வெளிச்சத்தின் உதவியுடன் யானை கள் இருக்கும் இடத்தின் அருகே செல்கிறார். பின்னர் யானைகளின் மீது டார்ச் லைட் வெளிச்சத்தை பாய்ச்சியும், சப்தமிட்டும் யானைகளை அங்கிருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றார். துணிச்சலுடன் சற்றும் பயமின்றி தங்கள் அருகே வந்து கூவும் ஒரு ஏழை தாயின் அன்பான இறைஞ்சலை யானைகள் புரிந்து கொள்கிறதோ என்னவோ சற்று நேரம் நின்று அவரை உற்று நோக் கியபடி யானைகள் திரும்பி சென்று விடு வது தான் ஆச்சரியம். யானைகளை சுற்றி வளைத்து தொடர்ச்சியாக வெடிகளை கொளுத்தி போடும் வன ஊழியர்களுக்கு கட்டுப்படாமல் துரத்திக் கொண்டு கொண்டு வரும் யானைகள் ராதாம்மாளின் குரலுக்கு கட்டுப்படுகின்றன.
காட்டுயிருக்கும் கருணை
இது குறித்து அவரிடம் கேட்டபோது, “தங்களது பசியை போக்க வரும் யானை களை அச்சுறுத்தியோ துன்புறுத்தியோ விரட்ட முயற்சிப்பது பாவகரமான செயல். இதனால் சேதமும் பாதகமுமே அதிக மாகும். எனது விளை பொருட்கள் சேதமா கும் என்பது மட்டுமல்ல, யானை போன்ற காட்டுயிர்கள் வனத்தில் உள்ள இயற்கை யான தீவனங்களை உட்கொள்ளாமல் உர மும், பூச்சிகொல்லி மருந்துகளும் பயன் படுத்தி வளர்க்கப்படும் விவசாய பயிர்களை அப்படியே உண்டால் அதற்கு உடல்நலக் கோளாறு தான் ஏற்படும் என்பதும் நான் அவற்றை விரட்டுவதற்கு காரணம். மேலும், கூட்டமாக சூழ்ந்து கொண்டு முரட்டுத்தனமாக விரட்டுவதும், அவற்றை வந்த வழியே காட்டை நோக்கி திருப்பாமல் அடுத்தவர் தோட்டத்திற்குள் செல்லுமாறு ஊரின் உட்பகுதிக்கு விரட்டுவதும் தான் ஆபத்தை உருவாக்குகிறது. யானைகள் நினைவுத்திறன் அதிகமுள்ள புத்திசாலி விலங்கினம் என்பதால் என்னை புரிந்து கொண்டு விலகி செல்கிறது என நினைக் கிறேன்” என்றார். எதிரில் என்ன உள்ளது என தெரிந்து கொள்ள இயலாத கடும் இருளில், எந்த வொரு தைரியசாலிகளையும் கதிகலங்க வைக்கும் காட்டு யானைகள் எதிர்படும் பயங் கரமான சூழலை, துளியும் பதட்டமின்றி கருணையோடு கையாள்கிறார் இந்த மூதாட்டி. துணிச்சலுக்கு வயதோ, உடல் வலுவோ அல்லது ஆண், பெண் என்ற பாலி னமோ காரணமல்ல என்பதற்கு உதாரண மாய் வன எல்லையில் தனந்தனியே உலா வருகிறார் ராதாம்மாள்.
-இரா.சரவணபாபு
மேட்டுப்பாளையம்