கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மயங்கி விழுந்த முதியவர் – பரபரப்பு
கோவை, டிச.19- கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், பட்டணம் மாரியம்மன் கோவில் வீதி யைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (55). இவர் ஆட்சியர் அலு வலகத்தில், இலவச பட்டா வழங்க வேண்டும் என வலியு றுத்தி மனு அளிக்க வந்திருந்தார். வரிசையில் காத்திருந்த போது, திடீரென சண்முகசுந்தரம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவரை மீட்டு தண் ணீர் கொடுத்து அமர வைத்தனர். இதன்பின் ஆம்புலன்ஸ் சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆட்சியர் அலுவலகத் திற்கு விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மயங்கி விழுந்த முதிய வரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அழைத்துச் சென்றனர். வரிசையில் நின்றிருந்த முதி யவர் திடீரென மயங்கி விழுந்ததால் ஆட்சியர் அலுவ லகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
6 ரயில்களில் பார்சல் கட்டணம் குறைப்பு
கோவை, டிச.19- கோவை - பொள்ளாச்சி ரயில் உட்பட 6 ரயில்களில் பார்சல் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மங்க ளூரு - யஷ்வந்த்பூர் வாராந்திர விரைவு ரயில் (எண்:16540), பொள்ளாச்சி - கோவை தினசரி ரயில் (எண்: 06420), ஷொரனூர் தினசரி ரயில் (எண்: 06466), ஷொரனூர் - நிலம்பூர் சாலை தினசரி ரயில் (எண்: 06473), செருவத்தூர் - மங்களூரு விரைவு ரயில் (06491), கண்ணூர் - செருவத்தூர் விரைவு ரயில் (எண்: 06469) ஆகிய 6 ரயில்களில் 100 கிலோ மீட்டர் வரை ஒரு டன் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கான கட்டணம் ரூ.286 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்ட ணம் 2023 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை அமலில் இருக் கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாடி கொண்டிருந்த வாலிபர் பலி
கோவை, டிச.19- கோவையில் நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த வாலிபர் திடீரென விழுந்து உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்ற னர். கோவை மாவட்டம், இடையர்பாளையத்தை அடுத்த பஜனை கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன் மகன் கவுதம் (26). இவர் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந் தார். இந்நிலையில், கவுதம் தனது நண்பர்களுடன் கணுவாய் பகுதியில் உள்ள மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட சென்றார். அங்கு நண்பர்களுடன் விளையாடி கொண்டிருந்த போது, திடீரென அவர் நிலைகுலைந்து மயங்கி சுருண்டு விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர் கள், கவுதமை மீட்டு டிவிஎஸ் நகர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு கவுதமை பரிசோதனை செய்த மருத் துவர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரி வித்தார். இதுகுறித்து தடாகம் காவல் துறையினருக்கு தக வல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதியவர் பலி
சேலம், டிச.19- சேலம், கேபிகரடு பகுதி யில் சுமார் 58 வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் மயங் கிய நிலையில் விழுந்து கிடந் தார். இதனைகண்ட அருகி லிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்த னர். அங்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வந்த நிலையில், அவர் ஞாயிறன்று பரிதாப மாக உயிரிழந்தார். அவர் யார்?, என்பது குறித்து போலீ சார் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
உடுமலை தமுஎகச படைப்பாளி இளையபாரதிக்கு கனவு விருது
திருப்பூர், டிச. 19 - உடுமலைபேட்டையைச் சேர்ந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் படைப்பாளி, குறும்பட இயக்குநர் இளையபாரதிக்கு கனவு விருது வழங்கப்பட் டது. திருப்பூர் மக்கள் மாமன்ற நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று நூல்கள் அறிமுகம், உடுமலை இளையபாரதியின் 15 ஆவது குறும்படம் வெளியீடு நடைபெற்றது. அத்துடன் இளை யபாரதிக்கு, கனவு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கொடுப்பினை எழுதிய “உயிர் காற்று”, உடு மலை இளையபாரதி எழுதிய கவிதைகள், சுப்ரபாரதிமணி யன் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்த “பெயிண்ட் பிரஷ் 000” ஆகிய நூல்கள் அறிமுகம் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் நூல் பற்றி தூரியை சின்னராஜ், உடு மலை தோழன்ராசாவின் சிறுகதை, கவிதை தொகுப்புகள் பற்றி இளைய பாரதி ஆகியோர் பேசினர். எழுத்தாளர் கொடுப் பினை இலங்கையில் தமிழர்கள் போர்ச்சூழலில் வாழ்ந்த தையும், கல்வியின் முக்கியத்துவத்தையும் விளக்கிப் பேசி னார். மக்கள் மாமன்ற தலைவர் சி.சுப்பிரமணியன் தலைமை வகித்தார். உடுமலை தோழன் ராசா, இயல்.கருணாகரன் உட் பட பலர் கலந்து கொண்டனர். உடுமலை இளைய பாரதிக்கு கனவு விருதை இன்சூரன்ஸ் குமார் வழங்கினார். முன்னதாக ரகுநாதன், ஆனந்தன், தங்கவேல் ஆகியோர் பங்கு பெற்ற வழக்காடு மன்றம் நடைபெற்றது.
வேன் மோதியதில் ஒருவர் பலி
அவிநாசி, டிச.19- சேவூர் அருகே லூர்துபுரத்தில் வேன் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் ஞாயிறன்று உயிரிழந்தார். சேவூர் அருகே மங்கரசுவலையபாளையம், லூர்துபு ரத்தை சேர்ந்த முருகேசன் மகன் கனகராஜ் (38) விவசாயி. இவர் தனது, இருசக்கர வாகனத்தில் அதேபகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் வேலுச்சாமி (50) என்பவரை பின்னால் அமர வைத்துக்கொண்டு புளியம்பட்டியை நோக்கி சென்று கொண்டிருந்தார். சேவூர் அருகே லூர்துபுரம் அருகே சென்ற போது பின்னால் வந்த வேன், கனகராஜின் இருசக்கர வாகனத்தின் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் அவிநாசி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில், பலத்த காயம டைந்த வேலுச்சாமி உயிரிழந்தார். கனகராஜ் மேல் சிகிச்சைக் காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டார். இதுகுறித்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.
ரூ.8 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவிநாசி, டிச.19- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில், 200 மூட்டைகள் வந்திருந்தன. குவிண் டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,850 முதல் ரூ.8,000 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,600 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ.6,900 முதல் ரூ.7,000 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ.8 லட் சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 8 வியாபாரிகள், 31 விவசாயிகள் பங்கேற்றனர்.
நெருக்கடியின் ஆதிமூலத்தை உணர வேண்டும்: கே.சுப்பராயன் எம்.பி.,
திருப்பூர், டிச. 19 - பனியன் விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில் தற்போது சந்திக்கும் நெருக்கடி நிலைக்கு காரணமாக இருக்கும் ஆதிமூ லத்தை உற்பத்தியாளர்கள் உணர்ந்து தீர்வு காண முயற்சிக்க வேண்டும் என்று திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்ப ராயன் கூறினார். திருப்பூரில் ஞாயிறன்று செய்தியாளர்க ளிடம் கே.சுப்பராயன் எம்.பி., கூறுகையில், சமீப சில ஆண்டுகளாகவே பனியன் விசைத்தறி உள்ளிட்ட ஜவுளி தொழில் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. நூல் விலை உயர்வு, ஜிஎஸ்டி ஆகியவற்றால் இந்த தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என்று உற்பத்தியாளர்கள் பொத்தாம் பொதுவாக கூறுவது, நிலைமையை நினைத்து புலம்பு வது பலன் அளிக்காது. இந்த நெருக்கடியின் ஆதிமூலத்தை உணர்ந்தால் தான் அதற்கு மருந்து தேட முடி யும். தனிப்பட்ட உற்பத்தியாளர்கள் மட்டு மின்றி உற்பத்தியாளர் சங்கங்களும் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும். பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, நூல் விலை உயர்வு என கடந்த எட்டு ஆண்டுகளில் நெருக் கடி மிக அதிகமாக அதிகரித்து இருக்கிறது. எனினும் 1991 ஆம் ஆண்டு புதிய பொருளா தாரக் கொள்கை என்ற பெயரில் அமல்படுத் தப்படும் கொள்கைகள் தான் இந்த சீரழிவுக ளுக்கு காரணம்.
சிறு, குறு, நடுத்தர தொழில் கள் அப்போது இருந்தே கடும் நெருக்கடியில் சிக்கி வருகின்றன. உள்நாட்டு தேவைக்காக உற்பத்தி செய்யும் இந்த தொழில்களை சந் தையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நிதி மூலதனம் அதன் கருவி களான ஐ எம் எப், உலக வர்த்தக அமைப்பு, உலக வங்கி ஆகியவற்றின் மூலம் இந்திய அரசை கொண்டு நிர்பந்தத்தை ஏற்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு நிதி மூலதனம், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாயம் அடைய வேண்டும் என்பதற்காக இங்குள்ள நடுத்தர சிறு தொழில்களை நசுக்கி வருகிறார்கள். இத னால்தான் திரும்பத் திரும்ப நெருக்கடி ஏற் பட்டு வருகிறது. இந்த நெருக்கடிக்கு என்ன காரணம் இதை எப்படி தீர்க்க வேண்டும் என்று பொறுப் புள்ள அரசு சிந்தித்து செயல்பட வேண்டும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய இந்த ஜவுளி தொழிலுக்கு உரிய ஆதரவளிக்க வேண்டும். மூலப் பொருள்களான பஞ்சு, நூல் உற்பத் தியை திட்டமிட்ட முறையில் அதிகரிக்க வேண்டும். உள்நாட்டு தேவைக்கு பயன்படுத் தவும், நெருக்கடி காலத்தை சமாளிப்பதற்கு இருப்பு வைத்துக் கொள்ளவும் உரிய ஏற்பாடு கள் செய்ய வேண்டும். ஆனால் தற்போது அர சுக்கு அத்தகைய கொள்கை எதுவும் இல்லை.
பருத்தி விவசாயத்தை அதிகரித்து இந்தி யாவில் உள்ள என்டிசி ஆலைகள் மூலமாக நூல் உற்பத்தி செய்து அதை ஜவுளி உற்பத்தி யாளர்களுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன்மூலம் லட்சக்கணக் கானோருக்கு வேலைவாய்ப்பு, அரசுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல் நடுத்தர சிறு குறு தொழில்க ளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து முற் றாக விலக்கு அளிக்க வேண்டும்.நாடா ளுமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதிக் கும் ஜி எஸ் டி வரி விதிக்கப்படுகிறது. சமுதா யக்கூடம் கட்டுவதற்கு ரூபாய் 40 லட்சம் ஒதுக் கினால் அதில் ரூபாய் 6 லட்சம் ஜிஎஸ்டி வரி யாக போய்விடுகிறது. மக்கள் பணத்தை மக் கள் பிரதிநிதிகள் மக்களுக்கே செலவிடுவ தற்கு ஜிஎஸ்டி வரி விதிக்கும் இந்த ஆட்சியா ளர்களை என்ன சொல்வது? இது எந்த வகை யிலும் நியாயப்படுத்த முடியாத அநியா யம்.
திருப்பூர் மாநகரம் ஏற்றுமதியின் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் அந்நிய செலா வணி ஈட்டி தருவதுடன் லட்சக்கணக்கானோ ருக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறது. இந்நக ருக்கு உள்கட்டமைப்பை மேம்படுத்து வதற்கு ஆண்டுதோறும் கிடைக்கக்கூடிய ஏற் றுமதி வருவாயில் குறிப்பிட்ட சதவிகிதத்தை ஒதுக்குவதற்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். தற்போது திருப்பூரில் சாலைகள் மிக மோசமாக இருப்பதால் ஒன் றிய அரசு உடனடியாக ரூ.250 கோடியை ஒதுக்க வேண்டும். மாநில அரசும் இத் தொகையை கேட்டுப்பெற வேண்டும். கடம்பூர், பர்கூர் மலைப்பகுதிகளில் வாழக்கூடிய மலையாளிகள் என்ற பழங் குடி மக்களுக்கு பழங்குடி சான்றிதழ் வழங்க முயற்சி செய்து வருகிறோம். மாநில அரசு பரிந்துரைத்தால் அரசியல் சட்ட திருத்தத் தின் மூலம் இதைச் செய்வதாக ஒன்றிய அரசு சொல்கிறது. மாநில அரசுக்கு கடிதம் அனுப் பியும் சமீபத்தில் நரிக்குறவர்கள் பழங்கு டிகளாக அறிவிப்பு செய்ததில் மலையா ளிகள் பட்டியலில் இடம்பெறவில்லை. இது குறித்து தமிழக அரசிடம் கோரிக்கை வைக்க இருப்பதாகவும் கே.சுப்பராயன் தெரிவித் தார்.
அரசியல் சாசனப்படி வாழ வேண்டும் என்று சொல்ல வேண்டிய ஆளுநர், சனாத னம், வர்ணாசிரமத்தின் படி வாழ வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார். அவர் ஆர்எஸ் எஸ் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வ தென்றால் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தாராளமாக பிரச்சாரம் செய்ய லாம். அவர் தற்போது ஆளுநராக பதவியில் நீடிக்க தார்மீக ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தகுதி இல்லை. எனவே அவர் பதவி விலக வேண்டும். இதற்காக டிச.29 ஆம் தேதி ஆளுநர் மாளிகை முன்பு இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகை போராட் டம் நடத்தப்படும். இவ்வாறு கே.சுப்பராயன் எம்.பி., கூறினார். இந்நிகழ்வின்போது, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பி னர் எம்.ரவி, மாநகர் மாவட்ட செயலாளர் எஸ். ரவிச்சந்திரன் எம்.சி., துணை மேயர் ஆர்.பால சுப்பிரமணியம், பி.ஆர். நடராஜன், எம்.அரு ணாச்சலம் எம்.சி., ஆகியோர் உடனிருந் தனர்.
உடுமலை அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:48.35/60அடி நீர்வரத்து:106கன அடி வெளியேற்றம்:167கன அடி அமராவதி அணை நீர்மட்டம்: 89.31/90அடி. நீர்வரத்து:513கனஅடி வெளியேற்றம்:273கன அடி
திருப்பூர் பூ மார்க்கெட் விலை (ரூபாயில்)
மல்லி:1000
முல்லை:400
பச்சை முல்லை:480
ஜாதி மல்லி:480
சேலம் காக்கடா:200
செவ்வந்தி:30 to 60
அரளி:220
சம்பங்கி:30
பெங்களூர் ரோஸ்:200
ஸ்டார் ரோஸ்:240
பரம்பிக்குளம் அணையின் புதிய மதகு பொருத்தும் பணி நிறைவு
திருப்பூர், டிச. 19 - பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் இதய மான பரம்பிக்குளம் அணையின், மூன்று மதகுகளில் ஒன்று எதிர்பாராதவிதமாக இரண்டு மாதங்களுக்கு முன் உடைந்துவிட்டது. மேற்படி உடைந்த மதகிற்கு மாற்றாக புதிய மதகு பொருத்தும் பணி இரவு-பகலாக நடைபெற்று சிறப்பாக நிறைவடைந்துள்ளது. சென்னையில் இருந்து சனியன்று வந்த தலைமைப் பொறியாளர், கண்காணிப்புப் பொறியாளர் முன்னிலை யில் பி.ஏ.பி. கண்காணிப்புப் பொறியாளர், பரம்பிக்குளம் அணையின் செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர்கள் பணி முடிந்த மதகினை இயக்கி ஆய்வு செய்தனர். மேலும் எதிர்காலத்தில் செய்ய வேண்டியவை பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.
இன்று மின்தடை
கோவை, டிச.19- கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி கள் நடைபெற உள்ளதால், செவ்வாயன்று (இன்று) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. அதன்படி, மேட் டுப்பாளையம் சாலை, அழ கேசன் சாலை (ஒரு பகுதி), நாராயணகுரு சாலை, சாய் பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக்கல்லூரி, முருகன் மில்ஸ், பாரதி பூங்கா, ராஜா அண்ணா மலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பஹ தூர் சாலை, பூ மார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்பகவுண்டர் சாலை, சிஎஸ்டபிள்யூ மில்ஸ், தெப்பக்குளம் மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலை யம், கிராஸ்கட் சாலை, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, புதியவர் நகர் (ஒரு பகுதி), ஆவாரம்பாளையம் (ஒரு பகுதி), டாடாபாத், அழ கப்ப செட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி, ஹட்கோ காலனி ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.
மூத்த குடிமக்களுக்கு விரோதமான ஒன்றிய அரசு
பொது இன்சூரன்ஸ் ஓய்வூதியம் பெறுவோர் சங்கம் குற்றச்சாட்டு
கோவை, டிச.19- மூத்த குடிமக்களின் சலுகைகளை தொடர்ந்து பறித்து, மூத்த குடிமக்க ளுக்கு விரோதமான அரசாக ஒன்றிய பாஜக அரசு செயல்படுவதாக இன்சூ ரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் மாநாடு குற்றஞ்சாட்டியுள்ளது. அகில இந்திய ஓய்வூதியம் பெறு வோர் சங்கத்தின் இனைப்பு சங்கமான பொது இன்சூரன்ஸ் ஒய்வூதியம் பெறு வோர் சங்கத்தின், வெள்ளிவிழா வருட 14 ஆவது பொது மாநாடு கோவையில் சனியன்று நடைபெற்றது. இம்மாநாட் டில் பங்கற்று அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சென்னை மண்டல துனைத்தலைவர் ஜே.குரு மூர்த்தி பேசுகையில், ஓய்வூதியம் என் பது அரசு ஊழியர்களுக்கு வழங்கும் வெகுமதியோ, சன்மானமோ அல்ல. அது ஊழியர்களின் உரிமை என சட்டம் சொல்கிறது. 2004 ஓய்வூதியத்திருத்தச் சட்டம் அனைத்து உடல் உழைப்பு தொழிலாளர்கள் உட்பட அனைவருக் குமான உத்தரவாதப்படுத்தப்பட்ட பென் சன் திட்டத்தினை உறுதி செய்துள்ளது. ஆனால், ஒன்றியத்தை ஆளுகிற அரசு, மூத்த குடிமக்களுக்கான பென்சன் மற் றும் இதர திட்டங்களை பெறும் சுமை யாக கருதுகிறது. பல்வேறு சலுகை களை தொடர்ந்து பறித்து வருகிறது. ஆரோக்கிய மருத்துவ காப்பீட்டுக ளின் மீது ஜிஎஸ்டி 18 சதவிகித வரி வசூல் செய்கிறது. இதனை ஐஆர்டிஏ உள் ளிட்ட அமைப்புகள் தவறு என சுட்டிக் காட்டியுள்ளது. இது வெகு மக்களுக் கும், மூத்த குடிமக்களுக்குமான விரோ தமான செயலாகும். இதுமற்றுமின்றி ரயில்வே துறையில் மூத்த குடிமக்களுக் கான 58 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு சலுகைகளை முழுவதுமாக பறித்துள் ளது. இதனை நாடாளுமன்றத்தில் விவா தத்திற்கு உட்படுத்தினால், ஒன்றிய அரசு விவாதத்தை ஏற்க மறுத்துள்ளது. இதுவரை மூத்த குடிமக்களுக்கு விரோ தமாகவே பார முகத்தை ஒன்றிய அரசு காட்டி வருகிறது. ஏற்றுக்கொள்ளப் பட்ட 30 சதவிகித குடும்ப ஓய்வூதிய உயர்வுக்கு உடனடியாக அரசு அர சானை வெளியிட வேண்டும். மேலும், பொது பென்சன் திட்டத்தில் பொதுத்துறை இன்சூரன்ஸ் நான்கு நிறு வனங்களையும் இனைக்க வேண்டும். இன்சூரன்ஸ் துறையில் நிலவும் போட்டி சூழலில் இது வெகுமக்களுக்கும் பாலிசிதாரர்களுக்கும் நன்மையளிக் கும், என்றார். இம்மாநாட்டில் திரளா னோர் பங்கேற்றனர்.