districts

img

நூறு வயதிலும் நெசவுத் தொழில் செய்யும் மூதாட்டி

கும்பகோணம், ஏப்.16- “நூறு” இந்த இலக்கு  விளையாட்டில் வேண்டு மானால் சாத்தியமாகலாம். ஆனால் வாழ்க்கையில் தொடுவது அத்தனை எளி தல்ல. பல இடையூறுகள், சோதனைகள், துன்பங்களை கடந்துதான், இதனை எட்ட இயலும்.  இது மனிதர்களுக்கு மிக வும் பொருந்தும். அதுவும்  தற்போதைய சூழலில் புதிது,  புதிதாக தோன்றும் உடல்நல பாதிப்புகளுக்கிடையே, நூறு வயதை தொடுவது ஒரு  சாதனையே.  அத்தகைய சாதனைக் குரியவர் கும்பகோணம் அருகே திருபுவனம் காந்தி  நகரில் வசிக்கும் ஜெய லட்சுமி. 1923 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு 100 வயது  நிறைவடைந்தது. நெசவாளர் குடும்பத் தைச் சேர்ந்த இவர், ஆரம்ப காலத்தில் பட்டு சேலை நெய்து வந்தார். கடந்த சில வருடங்களாக பட்டு சேலை நெய்வதற்கு தேவையான பட்டு நூலை தார் சுற்றி கொடுத்து வருகிறார். இவர் திருவட்டத்தில் பட்டு நூலை சுற்றும் வேகமே பார்க்கும் அனைவரையும் வியக்க வைக்கிறது. தனது வேலைகளை தானே பார்த்து வரும் இவ ருக்கு நான்கு மகள்கள் உள்ளனர். மூன்றாவது மக ளான கோமதி வீட்டில் தற் போது வசித்து வருகிறார். இவருக்கு பேத்தி-பேரன்கள் 12 பேர், கொள்ளு பேத்தி, கொள்ளு பேரன்கள் 19 பேர், எள்ளுப் பேரன்கள் 4  பேர் என மொத்தம் 35 பேர் உள்ளனர். ஆரம்ப காலத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்த  இவர், தற்போது ஆன்மீக  புத்தகங்களை படித்து வரு கிறார். இவர் மற்றவர்களைப் போல் நன்றாக பேசுவ தும் சுறுசுறுப்பாக செயல் படுவதும் சமையல் வேலை களை ஆர்வமுடன் செய்ய முற்படுவதும் குடும்பத்தினர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தருகிறது. நூறு வயதை கடந்தா லும் சுறுசுறுப்பாக வேலை  செய்யும் மூதாட்டி ஜெய லட்சுமியை பார்த்து அப் பகுதி மக்கள் ஆச்சரியப்படு கின்றனர்.