districts

img

உடல் நலக்குறைவான தந்தை உள்ள நிலையிலும், மன சோர்விலும், போட்டிக்கு தேர்வான அரசுப்பள்ளி மாணவர்

உதகை, டிச.22- விபத்தில் சிக்கிய தந்தை படுத்த படுக்கையாக உள்ளார் என்ற மன சோர்விலும், மாநில அளவிலான நகைச்சுவை வழங்குதல் போட் டிக்கு குன்னூர் அரசு பள்ளி மாண வர் தேர்வாகி உள்ளது நெகிழ்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்களுக்கு “கலைத் திருவிழா” என்ற பெய ரில் பல்வேறு போட்டிகள் நடத்தப் பட்டு வருகின்றன. வட்டார அள வில் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக ளில் கலந்து கொள்ளத் தகுதி பெறு வார்கள்.  இதன்பின்னர்,  மாவட்ட அள வில் நடைபெறும் போட்டியில் முத லிடம் பெறுபவர் மட்டும் மாநில அளவிலான போட்டியில் அந்தந்த  மாவட்டத்தின் சார்பாக கலந்து கொள்வார்கள்.

இதில் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள  சோகத்தொரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் கோபி கிருஷ்ணன், மாநில அளவிலான நகைச்சுவை வழங்குதல் போட் டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  இவர், குன்னூர்  வட்டார  அள வில் தேர்வு பெற்று, உதகையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்று, தற் போது மாநில அளவில் நடை பெறும் போட்டிக்கு தேர்வு செய்யப் பட்டு உள்ளார். மாவட்ட அளவில் நடந்த போட்டியில் பல்வேறு அறி வார்ந்த கருத்துக்களை நகைச் சுவையாகவும், சினிமா பாடல் மெட் டிலும் விளக்கி கூறினார். மாநில அளவிலான போட்டி டிச.26 ஆம் தேதி முதல் டிச.30 ஆம் தேதி வரை மதுரையில் நடைபெற உள்ளது.

இதில் கலந்து கொள்ள தற்போது தீவிர பயிற்சி எடுத்து வருகிறார். மேலும், மாணவர் கோபிகிருஷ் ணன்  காற்றுக்கருவி வாசித்தலிலும் மாவட்டத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், கோபிகிருஷ் ணன் வெற்றி பெற்று நீலகிரி மாவட் டத்திற்கு பெருமை சேர்க்க வேண் டும் என்று பள்ளி தலைமையாசியர் சுமதி, ஆசிரியர்கள் சுசீலா, புஷ்பா, சித்ரா, ஹேமலதா, குணவதி, இல் லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் பிரியா, சுகுணா மற்றும் பள்ளி மேலாண்மை குழு சார்பில் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர். மாணவர் கோபி கிருஷ்ணனின் பெற்றோர் யோகராஜ் - ஜானகி தம் பதியினர் கூலி வேலை செய்து வரு கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாணவரின் தந்தை யோக ராஜ் விபத்தில் சிக்கி வீட்டில் படுத்த படுக்கையாக இருக்கிறார். இவ்வ ளவு மன சோர்வான சூழ்நிலையி லும், மற்றவர்களை சிரிக்க வைக் கும் பணியில் கோபி கிருஷ்ணா  சிறப்பாக ஈடுபட்டு வருவது நெகிழ்ச் சியையும், வாழ்க்கை மீது அவ ருக்குள்ள தன்னம்பிக்கையையும் காட்டுவதாக உள்ளது என சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.