districts

img

குட்டையில் விழுந்து யானை உயிரிழப்பு

கோவை, ஜூலை 10- மேட்டுப்பாளையம் அடுத்துள்ள தாசம்பாளையம் பகுதியில் உள்ள குட்டையில் விழுந்து ஆண் காட்டு  யானையொன்று உயிரிழந்து கிடப்பது கண்டறியப்பட் டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகரை ஒட்டி யுள்ள தாசம்பாளையம் பகுதியில் புதர் காட்டின்  அருகே குட்டையொன்று உள்ளது. அங்கு அண்மை யில் பெய்த மழை காரணமாக இக்குட்டையில் சேறும்  சகதியுடன் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், புதனன்று அதிகாலை இக்குட்டை யில் யானையொன்று உயிரிழந்து கிடப்பதை கண்ட  அப்பகுதி பொதுமக்கள் இது குறித்து மேட்டுப்பாளை யம் வனத்துறையினருக்கு தகவல் தெரித்தனர். தகவ லின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையி னர் ஆய்வு செய்ததில் உயிரிழந்திருப்பது மேட்டுப்பா ளையம் சுற்று வட்டார பகுதிகளில் பல ஆண்டுகளாக சுற் றித்திரியும் ஊசி கொம்பன் என்றழைக்கப்படும் ஆண்  யானை என கண்டறிந்தனர். மேலும், யானைக்கு முப் பது வயதிருக்கலாம் என்றும் யானை சேற்றில் சிக்கி  உயிரிழந்ததா அல்லது உடல் நலக்குறைவு கார ணமா என்பது அதன் உடற்கூறு ஆய்விற்கு பின்னரே தெரிய வரும் என்றனர். யானையின் உடலை குட்டை யில் இருந்து தூக்கி வெளியே எடுக்க ஜேசிபி இயந்தி ரம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்த யானை தாசம்பாளையம், ஓடந்துறை, கல்லார், சமயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த நான் காண்டுகளுக்கும் மேலாக சுற்றி வருகிறது. இதன் தந்தங் கள் ஊசி போல் கூர்மையுடன் இருப்பதால் இதனை ஊசி  கொம்பன் என வனத்துறையினரால் அழைக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.