districts

img

அரசு பள்ளியில் மரங்கள் வெட்டி கடத்தல் கண்டு கொள்ளாத கல்வித்துறை

தருமபுரி, ஜூலை 22- தருமபுரி அருகில் உள்ள அரசு பள்ளியில்  20 டன் விலை உயர்ந்த மரங்கள் வெட்டி  கடத்தப்பட்டுள்ளது. இதை கல்வித்துறை  அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.  தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி அரசு  மகளிர் உயர் நிலை பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளி வளாகத்தில் வேம்பு, புங்கை, பாதம், மூங்கில், வாகை, தேக்கு உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட மரங் கள் உள்ளன. இப்பள்ளியின் சுற்றுச் சுவர் அருகில் உயர்  மின் அழுத்த மின்சார வயர் செல்வதால் பள்ளி யில் பயிலும் மாணவிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் என பள்ளி வளாகத்தில் உள்ள மின்கம்பத்தை அங்கிருந்து அகற்றி பள்ளிக்கு வெளியே அமைக்குமாறு கடந்த 2022ஆம் ஆண்டு தலைமையாசிரியராக இருந்த கவிதா என்பவர் மாவட்ட நிர்வா கத்திற்கும், மின்சார வாரியத்திற்கும் கடிதம்  எழுதியிருந்தார்.

ஆனால் எவ்வித நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை.  இந்நிலையில், பள்ளியின் மேலாண் மைக் குழு தலைவர் கிருஷ்ணம்மாள் என்பவர் பள்ளி வளாக பராமரிப்பு பணி கள் எனக்கூறி தீர்மானத்தை நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்தின் எவ்வித அனுமதியும் பெறாமல் மினி லாரியில் 20 டன்னுக்கும் மேற்பட்ட சுமார் 5 லோடு நன்கு வளர்ந்த வேம்பு, புங்கை, பாதாம் உள்ளிட்ட மரங் களும், பள்ளியின் சுற்றுச் சுவர் ஓரத்தில் நன்கு வளர்ந்து விலை உயர்ந்த தேக்கு மரத்தையும், பள்ளி செயல்பட்டு கொண்டு இருக்கும் போதும் இரவு பகலாக வெட்டி கடத்தி சென்றுள்ளார்.  இதனால் அப்பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர்களும், ஆசிரியர்  மற்றும் சமூக ஆர்வலர்களும் அதிர்ச்சி யுற்றனர். இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலவலரும், பள்ளி தலைமை ஆசிரி யரும் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.  இச்சம்பவம் குறித்து இதே போல் மாவட் டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பராமரிக் கபட்டு வந்த மரங்களை வெட்டி கடத்தப் படுவது வாடிக்கையாக உள்ளது. ஆனால்  கல்வித் துறை அதிகாரிகள் கண்டும், காணா மல் உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் மாவட்ட நிர்வாகம் மரங்களை கடத்துபவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வ லர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.