தருமபுரி. மே 4- தருமபுரி மாவட்டம், வி.ஜெட்டி அள்ளி கிராமத்தில் கூலி தொழிலா ளர்களிடமிருந்து நிலத்தை அப கரிக்க நில புரோக்கர்கள் முயற் சித்து வருகின்றனர். இத்தகைய நில புரோக்கர்களுக்கு துணைபோகும் அதிகாரிகளால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தருமபுரி வட்டம், இலக்கியம் பட்டி ஊராட்சிக்குட்பட்டது வி. ஜெட்டிஅள்ளி கிராமம். இந்த கிராமம் தருமபுரி நகரத்தையெட்டி உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த லட்சுமி (எ) ராஜலட்சுமிக்கு சொந்தமான 10 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்திற் கான பட்டா இவர் பெயரில் உள்ளது. இந்நிலையில், ராஜ லட்சுமி தன்னுடைய நிலத்தில் பணி யாற்றியவர்களே இதனை பரா மரித்து, வசித்துக்கொள்ளட்டும் என்று கூறிவிட்டு வெளிநாடு சென் றுள்ளார்.
இதனையடுத்து, இப் பகுதி மக்கள்50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிலத்தில் ஆடு,மாடு வளர்த்தும், கொட்டகை அமைத்து வசித்து வருகின்றனர். இந்நிலையில், தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை லட்சுமி (எ) ராஜலட்சுமிக்கு சொந்தமான நிலம் சர்வே எண். 578,579 ஆர்ஜிதம் செய்துள்ளனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆர்ஜிதப்படுத்திய நிலத்தை தனி ஒருவர் ஆக்கிரமிப்பு செய்யும் முயற்சியில் ஈடுபட்டு நிலத்தை அளந்து பிரிக்கும் வேலையில் ஈடு பட்டுள்ளார். வி.ஜெட்டிஅள்ளி கிராமத்தை சேர்ந்த மக்கள் இந்த நிலத்தை நீண்ட ஆண்டுகாலமாக அனு பவித்து வருகின்றனர். எனவே, தனி நபர் இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்கு அதிகாரிகள் துணை நிற்கின்றனர். அதிகாரிகளின் துணையோடு நில புரோக்கர்கள் அனுபவ நிலத்தில் இருந்து வருப வர்களை ஆபாச வாரத்தைகளால் திட்டுவதும், ஆண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத் தலை ஏற்படுத்தி வருகின்றனர். இதனையடுத்து, அனுபவ நிலத்தில் இருந்து வரும் அதே பகுதி மக்களுக்கு அனுபவ நிலங்களுக் கான பட்டா வழங்க வேண்டும் என கடந்த மாதம் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி, மாவட்ட ஆட்சியர் கி. சாந்தியிடம் மனுவும் அளிக்கப்பட் டிருந்தது. இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி யளித்துவிட்டு, மீண்டும் அதிகாரி கள் துணையுடன் நில புரோக்கர்கள் அப்பகுதி மக்களுக்கு காலி செய்யுமாறு அச்சுறுத்தி வரு கின்றனர். இதனையடுத்து, அப் பகுதி மக்கள் அனுபவ நிலங்களை சுற்றி கம்பி வேலி அமைத்துள் ளனர். இதனையறிந்த தருமபுரி வட்டாட்சியர் அம்மக்களை காலி செய்யுமாறு மிரட்டிச் சென்றுள் ளார். இது நில புரோக்கர்களின் தூண்டுதலின் பெயரில் நடை பெற்றுள்ளதாக அப்பகுதியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து வி.ஜெட்டி அள்ளியை சேர்ந்த பழனி என்பவர் கூறுகையில், எங்க தாத்தா காலத் தில் இருந்து ஐயர் நிலத்தில் வேலை செய்து வந்தோம். அவர்கள் நிலத்திலேயே ஒரு பகுதியாக நாங்கள் ஆடு, மாடு வளர்த்து வந்தோம், சுமார் 70 வருஷமா நாங்க இந்த நிலத்தை அனுபவம் செய்து வருகிறோம், இந்த நிலத்தை 18 குடும்பம் அனுபவம் செய்து வரும் எங்களுக்கு பட்டா வழங்க சொல்லி மனு கொடுத்தோம். பட்டா கொடுப்பதாக அதிகாரிங்க சொல்லிட்டு, புரோக்கர் மூலம் நிலத்தை புடுங்குறாங்க என்றார் வேதனையோடு.
இதேபோன்று மணி என்பவர் கூறுகையில், இந்த நிலத்தை நீங்கள் பாதுகாத்துக்கோங்கன்னு சொல்லிட்டு வெளியூரு போயிட் டாங்க. நாங்க ஒரு 50 வருஷமா இங்கதான் இருக்கிறோம். பட்டா கேட்டு மனு செய்தோம். இப்போது, நிலத்தை பறிக்க அதிகாரிகளும், நில புரோக்கர்களும் சதி செய் கிறார்கள். இது குறித்து நஞ்சம்மா என் பவர் கூறுகையில், நாங்கள் மாட்டு கொட்டகை வைத்திருந்த இடத்துல நிலபுரோக்குறங்க வந்து, கட்டி வச்சிருந்த மாட்ட விரட்டுனாங்க.எங்கள ஆபாசமா திட்டி அடிக்க வராங்க. நாங்க உயிருக்கு பயந்து ஓடிட்டோம். இரவு நேரத்துல உங்கள என்ன பன்னுவும்னே தெரி யாதுன்னு மிரட்டுராங்க, எங்க ளுடைய வாழ்வாதாரமே இந்த இடம் தான். மீண்டும் விரட்டுனாங் கனா இதே இடத்தில் தீக்குளித்து சாவதை தவிர வேறவழியில்ல என கண்ணீர் மல்க கூறினார். நீண்ட ஆண்டுகாலமாக அனு பவம் செய்துவரும் 18 குடும்பங் களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பெயரில் நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடும் நில புரோக்கர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர் வாகத்தை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.