உடுமலை, நவ.26- அனைத்து நிலைகளிலும் ஏமாற்றத்தையே சந்தித்து வரும் விவசாயிகளை வேளாண்துறை அதிகாரிகள் கண்டு கொள்வ தில்லை என தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி யுள்ளனர். உடுமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. இத னால் அமராவதி மற்றும் திரு மூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. விவசாய பணி களை மேற்கொண்டு வரும் விவ சாயிகளுக்கு தேவையான ஆலோ சனைகளை வழங்க வேளாண் துறை அதிகாரிகள் முன்வர வேண் டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதியில் பெய்த மழையால் நிலத்தடி நீர் மட்டம் உயர்த்துள்ள நிலையில், விவசாயிகள் தக்காளி, வெங்கா யம் மற்றும் சோளம் உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ள னர். மானாவரி நிலங்களில் சிறுதா னியங்களை பயிரிட்டுள்ளனர். கடந்த காலங்களில் தனியார் நிறு வனங்களின் விதைகளை விதைத்து சரியான விளைச்சல் இல் லாமல் ஏமாற்றம் அடைந்த நிலை யில், மீண்டும் தனியார் விதை நிறு வனங்களின் விற்பணை பிரதி நிதிகள் விவசாயிகளிடம் தங்க ளுடைய நிறுவனத்தின் விதை, மருந்துகளை பயன்படுத்தும் படி விவசாயம் செய்யும் இடங்களுக்கு சென்று விளம்பரம் செய்து வரு கின்றனர். இதனால் மீண்டும் விவ சாயிகள் ஏமாற்றம் அடைய அதிக வாய்ப்புள்ளது. உடுமலை பகுதியில் ஏற்கனவே விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்களுக்கு கட்டுப் படியான விலை கிடைப்பது இல்லை. வியாபாரிகளும், தனி யார் கமிசன் மண்டி உரிமையா ளர்களும் சேர்ந்து கொண்டு தான் தோன்றித்தனமாக குறைந்த விலையை நிர்ணயம் செய்வ தால், கட்டுபடியான விலை என்பது கிடைப்பதில்லை. அனைத்து தரப் பிலும் ஏமாற்றம் ஒன்றையே சந்திக் கும் விவசாயிகள் நிலைமையை வேளாண்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. மேலும், தனியார் நிறுவனங்களின் விதை களை அதிகாரிகள் ஆய்வு செய்கி றார்களாக? என்ற வேளாண் துறை யின் செயல்பாடு என்பது கிராமப் ்புற விவசாயிகளுக்கு சென்று அடைவதில்லை. வசதி படைத்த விவசாயிகளுக்கு மட்டும் அரசு திட் டங்கள் செல்வதால், அரசு திட்டம் பற்றி எதுவும் அறியாத ஏழை விவசாயிகள் தனியார் நிறுவனங்க ளின் ஆசை வார்த்தைக்கு தாங்கள் விவசாயம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு விவ சாய சங்கத்தினர் உடுமலை வரு வாய் கோட்டாச்சியர் கூட்டத்தில் அளித்த புகாரில், உடுமலை பகுதி யில் வேளாண் துறை என்பது ஒன்று உள்ளதா? என்ற கேள்வியுள்ளது. கடந்த முறை விவசாயிகள் வெளி நாட்டு கம்பெனிகளின் விதை யால் தான் விளைச்சல் இல்லை என்று கூறினால், விளை நிலம் சரியில்லை. முறையான பராமரிப்பு இல்லை என்ற பதில் தான் வருகி றது. இதை வேளாண் துறை அதி காரிகளும் பார்த்து கொண்டு இருக் கிறார்கள். தற்பொழுது இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு என்பது, வேளாண்துறை செயல்படுத்தும் திட்டங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் தெரி யும் வகையில் அதிகாரிகளின் செயல்பாடுகள் இருக்க வேண் டும். விளைநிலங்களில் உள்ள மண்ணை பரிசோதனை செய்ய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். உற்பத்தி செய்த பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக் கவும், உற்பத்தி செய்த பொருட்கள் விற்பணைக்கு வரும் போது, இடை தரகர்களை உள்ளே வராமல் செய்ய வேண்டும், என்பதாகும்.