கோவை, டிச.20- சமூகநீதிப் பயணத்தில் வெற்றிகரமாக அடியெடுத்து வைக்கும் அம்பேத்கர் இல வச கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி மையத் தின் 16 ஆவது ஆண்டு துவக்க விழா வெள்ளி யன்று நடைபெற்றது. ஏழை,எளிய குடும்பத்து இளைஞர்களின் அரசு வேலை என்கிற கனவை நனவாக்கி வரும், கோவை டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தின் 16 ஆம் ஆண்டு துவக்க நிகழ்வு கோவை திருச்சி சாலையில் உள்ள அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கட்டிடத்தில் உள்ள சரோஜினி ஹாலில் வெள்ளியன்று நடைபெற்றது. இந்நிகழ்வில், அம்பேத்கர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் மையத்தை துவக்கி தங்கள் வெற்றிக்கு உறுதுணையாக திகழ்ந்த ஆசிரியர்களை யும், அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும், இந்திய வங்கி ஊழியர் சம்மே ளனத்திற்கும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணிக்கும் நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வில், அகில இந்திய இன்சூ ரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தென்மண்டல துணைச் செயலாளர் வி.சுரேஷ், கோவை கோட்ட பொதுச் செயலாளர் துளசிதரன், கோட் டத் தலைவர் பி.வி. குமார் ஆசிரியர்கள் முத்து ராமலிங்கம், சீனித்துரை மற்றும் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு மையத்தில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.